Monday, September 20, 2010

காதல்

கவிதைகள் பாட ஆசை 
கவலைகள் மறக்க ஆசை 
உன் நிணைவுகளில் வாழ ஆசை....... 

நிணைத்ததும் மரணிக்க ஆசை 
உலகத்தை ஆழ ஆசை
உன் கண்களை படிக்க ஆசை...........

சின்னச் சின்ன கனவுகான ஆசை
உன் உருவம் சிற்பமாக்க ஆசை
சிலநேரம் உன்னோடு சண்டை போட ஆசை.........

சிறகுகொண்டு பறக்க ஆசை....
நான் பறக்கும் தேசம் எல்லாம் நீயாக ஆசை......
என் கனவுகள் எல்லாம் நீயாக ஆசை..........

என் உறவுகள் எல்லாம் நீயாக ஆசை
எனக்கு புரியும் மொழி மட்டும் நீ பேச ஆசை......
என் ஆசைகள் எல்லாம் நீயாக ஆசை,,,,,,,,,,,,,!!!!

************************************************
உன்னை மறக்க நினைக்கும் போதெல்லாம்
மறந்தே போய்விடுகிறேன்...
உன்னை மறப்பதற்கு..!

****************************************
விரும்பிட காரணம் தேவை வெறுத்திட தேவை இல்லை 
அதனால் தான் அன்பே !
வெறுக்கிறாயோ என்னை காத்திருக்கிறேன் 
நீ வெறுத்த காதலுடன்..
****************************************
உன்னோடு பேசிக் கொண்டும்
உனக்காக காத்திருந்துமே
வாழும் வாழ்க்கை தான்
எனக்கு கிடைத்த
மிகச் சிறந்த பரிசு!!!
****************************************
காத்திருப்பேன்!!!

காலம் 
முழுவதும் 
அல்ல...

என் 
காலம் 
முடியும் 
வரை
****************************************
♥.♥.♥ ...இமைக்காமல் நீ பார்த்த அந்த 
அரை நிமிடம் போதும் இறுதி வரை... ♥.♥.♥
****************************************
நாம் நேசிக்கும் பலர்

நம்மை மறக்க 

நினைத்தாலும் …

நம்மை நேசிக்கும் சிலரை 

நாம் நினைக்க 

மறக்க கூடாது 
****************************************
என்ன மாயம் செய்தாயோ ?

பிரியும் போது
என்ன மாயம் செய்தாயோ 
நீ மறக்க சொன்ன பின்னும் 
உன்னையே நினைக்கிறது
என் மனம்....

****************************************
மௌனம்.....

மௌனம்
காதலர்கள் சந்திக்கும் போது 
அதிகம் பேசிக்கொள்ளும் மொழி
****************************************
உன் மீது நான் கொண்ட காதல்.....

உன் மீது நான் கொண்ட காதலால்
கண்ணீர் சிந்துகிறேன்
நீ
என்னை பிரிந்ததைக்கூட உணரவில்லை
காரணம் உன்னை நினைக்கும் போது
என் கண்ணில் கண்ணீராக நீ வந்துவிடுவதால்.....

****************************************

மழை பொழியும் வானம் நீ ,
வறண்ட பாலை வனத்தில் கள்ளிச்செடி நான்,
ஒரு முறை மோதி விடு ,
மலர்வேன் மலராய் …

****************************************
****************************************
****************************************
****************************************
****************************************
****************************************
என்னவளே 
எத்தனை முறைகேட்டும் ஒருமுறை 
கூட சொல்ல மறுக்கிறாய் எனக்காய் 
நான் உன்னிடம் கேட்பதும்
நீ சொல்ல மறுக்கும் அந்த மூன்று
வார்த்தையைத்தான் ...

கேட்க்கும் போது சொல்லிவிடு ...

ஒரு வேளை நீ சொல்லும் தருணத்தில்
நான் கேட்க்க முடியா தூரத்தில் இருக்கலாம்...

*******************************
காதலிப்பதற்கு
நீ இருக்கிறாய்
என்ற காரணமே
போதுமாயிருக்கிறது
நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு

*****************************************
காதலித்து தோற்றவர்களின் வலியை விட
காதலை சொல்லாமல் தோற்றவர்களின்
வேதனைதான் அதிகம

*****************************************
நிஜங்கள் தரும் சந்தோசத்தை விட 
நினைவுகள் தரும் சந்தோசம் அதிகம் 
என்றால் 
நிஜங்கள் நிலைப்பதில்லை 
நினைவுகள் அழிவதில்லை

*****************************************
காதலில் தோற்றவர்களால் 
தான் கவிதைஎழுத முடியுமாம் அது எப்படி நான்தான் 
உன்னிடம் என் காதலைச் சொல்லவே இல்லையே

*****************************************
என்னவளே நிழலாய்
என்னுள் என்றும் நீ !
நிஜத்தில் என்னை 
விட்டு ஏன் நீ 
பிரிந்து போகிறாய் ? 
உன் நினைவுகளை
சுமக்கும் என் இதயத்தயாவது
என்னிடம் தந்துவிட்டு போ.....

*******************************
நீ....

என்னிடம்
எதை வேண்டுமானாலும்
கேள்....

என்னுள்ளிருக்கும்
உன்னை தவிர ..

*******************************
அந்த சிரிப்புத்தான்... 
அந்தச் சிரிப்பைத்தான் 
இன்றுவரை மறக்காமல் 
வைத்திருக்கிறேன் என் 
நினைவில்...!!

******************************************
உன்னை மறக்க நான் நினைப்பதில்லை
என்னை மரணம் வந்து அழைக்கும் வரைக்கும் 
நீ தந்த காயங்களோடு உன் நினைவுகளை சுமந்த படி என் காதல் என்றும் வாழும்..

*****************************************
இதயத்தை காயபடுத்துகிறாய் 
அதில் நீ இருப்பது தெரியாமல் 

***********************************
விழிகளில் தொலைத்த எதிர்காலம் ...

எவளின் கண்களில்
என் கண்கள் சிக்கிக் கொண்டதோ...

எவளின் அங்க அசைவுகளில்
நான் மூர்சையாகிறேனோ...

எவள் வனப்பில்
என்வாலிபம் மண்டி இட்டதோ...

எவளின் திருமுகம்
என் இரவுகளை திருடிக்கொள்கிறதோ...

எவளைக் கண்டால்
இதயத்தில்
எரிமலை வெடிக்கிறதோ...

எவளின் திரு உதட்டில்
உயிரானது
ஒட்டி ஊசலாடுகிறதோ...

எவளின் அருகாமை
ரத்தத்திலே
ரயிலோட வைக்கிறதோ...

எவள் இறந்தால்
அண்ட சராசரங்கள் யாவும்
பொடியாகிப்போகிடும்
எனப்படுகிறதோ...

அவளுக்கு
என்னைப்பற்றி ஏதும் புரிவதில்லை...

அவள் விழிகளில் தொலைத்த
என் எதிர்காலம் போலவே..

**********************
உன் மௌனத்தின்
பின்னால் உள்ள
வார்த்தைகளையும்,
உன் கோபத்தின்
பின்னால்உள்ள
அன்பையும்
யார் புரிந்து
கொள்கிறார்களோ.....
அவர்கள் தான்
உனக்கானவர்கள்!
*****************************************
நீ இல்லை என்று சொன்னால்
வருத்தபடுவது
மனசு மட்டும் தான்
என்றாலும்
கலங்குவது கண்ணும் தான்
*****************
காலங்கள் கடந்த போதும் .....
காதல் மட்டும் உன்னிடத்தில் ......!!
கவிதை எழுதிய போதும் ......
கற்பனை மட்டும் உன்னிடத்தில்.....!!
உதடுகள் அசைந்த போதும் .....
உள்ளம் மட்டும் உன்னிடத்தில்......!!
கண்கள் உறங்கிய போதும் .......
கனவுகள் மட்டும் உன்னிடத்தில் ....!!
நான் இறக்கும் போதும் ......
என் இதயம் மட்டும் உன்னிடத்தில்....!!
 ***************
கண்ணீர் சிந்தும்போது
நீ வாங்கிக் கொடுத்த
கைக்குட்டைதான் துடைக்கிறது
ஆனால்
உன் கையே துடைப்பதாக
நினைத்துக் கொள்கிறேன்...
********************************
காதலுக்கு கண்கள் இல்லை பெண்ணே .இருப்பினும் என் கண்களில் உன்னை சுமக்கிறேன் சுமையாக அல்ல கண்ணீராக ..
காதல் ஒரு தும்பமான கலை . காலம் செய்த மாய வலை . கண்களில் கண்ணீரை நிரப்ப கூடிய அலை
**********************************
நெஞ்சம் வலி கொண்டது -
உன்னை தேடி தேடி உயிர் சுகம் கண்டது
உன் நினைவால் நான் உயிர் பிழைத்தேன்
உறங்கா நிலையில் கனவு கண்டேன்
தொடும் உணர்வுகள் உன்னை தேடுதே
தொலைந்த ஆசைகள் -என் கையில் வந்ததே
************************************
மல்லிகை சூடும்போது
விழிகளால் எப்படி இருக்கு என்பாள்!
அவள் இதழ்களைக் கவர்ந்தபடி மயக்குதடி என
மெல்லிடையில் கிறுக்குவேன்!!
**************************************

தமிழ் மொழி என்றாலே தோன்றிய
முதல் வார்த்தை அம்மா
உன்னை பார்த்ததும் தோன்றும்
முதல் வார்த்தை காதல்
கரடு முரடாக இருந்த என் வாழ்வில்
காற்றாய் நுழைந்தவள் நீ
அனுவனுவாய் என்னுள் நுழைந்து
உன் காதலுக்கு அடிமையாக்கியவள் நீ
ஆயிரம் பேர் எதிர்த்து நின்றாலும்
உன்னை பிரியேன் என்று உறைத்தவள் நீ
இறுதியில் காசு பனமே வாழ்க்கையென்று
கை விரித்தவளும் நீ……

**************************************
 ௧ண்டதும் காதல் இனிக்கும்
காணாத போதும் காதல் இனிக்கும்
என உணர வைத்த காதலனே
என்று உனை பார்த்தேனோ
அன்றே நினைத்தேன் இனி எல்லாமே
நீ தான் என்று ***************
********************

உன்னை நேரில் பார்க்காத
நாட்கள் நிறைய உண்டு
- ஆனால்
உன்னை கனவில் பார்க்காத
இரவுகள் ஒன்று கூட இல்லை ............
***************
பாசம்
விடியும் வரை தெரியாது
கண்டது கனவு என்று !
பிரியும் வரை தெரியாது
பாசம்
எவ்வளவு ஆழம் என்று !
*****************

Malaiyil   Nanaya Aaasai Than
en mithu pata malai thuliyai
aval munthanai thudaikum endral....

நட்பு என்பது லைப்ரரில இருக்குற பூக்கு மாதிரி
அதை யார் வேணும்னாலும் படிக்கலாம்
ஆனால்
காதல் என்பது நாம ஈழுதுகிற டைரி மாதிரி
அதை நாம மட்டும் தான் படிக்கணும்
சில காதல் ஜெயிக்கும் ஆனால் அதை யாரும் பேசுவதில்லை
சில காதல் தோற்கும் ஆனால் அது பல ஜென்மங்கள் பேசப்படும்
*************

உயிரைக் குடிக்கும்
தனிமை கூட இனிக்கிறது
உன் நினைவு
வரும் போது...!


அடர்ந்த சாலையில் பொழிந்த மழையில்
பீறிட்டு மிளிரும் விளக்கு வெளிச்சத்தில்
குடையினை மிஞ்சிய சாரலில்
நனைந்த படி உனை ரசிக்க வேண்டும்
உன் காதலை ருசிக்க வேண்டும்..


***********
முதல் காதல் மறக்காது கண்ணே..
அது மறைத்தாலும் மறையதே நெஞ்சில் ..
கண்ணீர் இன்றி காதல் இல்லை..புரியாத...
காதல் இன்றி வாழ்வும் இல்லை...தெரியாத...
கண்களில் உள்ள காதலை சொல்லத்தான் என்னமோ...
சொன்னபின் அந்த காதலும் என்னதான் ஆகுமோ..
***********
உயிரோடு இருந்தபொழுது சேரவிடவில்லை, 
இறந்த பின்னும் சேரவிடவில்லை, 
அவன் புதைக்கப்பட்டான், 
இவள் எரிக்கப்பட்டாள்.
ஆனால் அவர்கள் காதலை மட்டும் 
இன்னும் பேசிக்கொண்டிருக்கிறது 
இந்த பாலாய்ப்போன சமூகம்,
*****************************
நடு இரவில், நடு கடலில்
அந்த அலையின் ஓசையில் மயங்கி
உன் மடி சாய
ஆசை கொண்டேன்....!
அந்த ஆசை மட்டும்
இன்றும்
உயிருடன் வாழ்கிறது
உயிரில்லா என் கல்லறையில்....!
******************************
கல்லில் ஆன

இதயம் உனக்கு
ஆனால் அதில்
செதுக்கப்பட்ட
என் காதல் நினைவுகள்
... என்றும் அழிவதில்லை!

ஆதலால்,
உன் மௌனத்தை
கலைத்துவிடு
என் காதலை
வாழவிடு....!!!...

***********
வார்த்தைகளால் கொன்றாலும் பரவாயில்லை... மௌனத்தால் சித்திரவதை செய்யாதே.....! 
*******************************
உண்மைதானடி நீ பேசாமல் இருக்கும் இந்த மௌனதைவிட எனக்கு வேறென்ன தண்டனை 
தர முடியும் உன்னால்..!
இப்படியே நீ மெளனமாக இருந்து என்னை 
நீ கொன்றுவிடாதே அன்பே..!! ;
***********************************
மறந்து போன வார்த்தைகளை மொத்தமாய் சேர்த்து வைத்து கொஞ்சம் தனிமையிலும் கொஞ்சம் கவிதையிலும் பேசி விட்டு போகிறேன்
*************************
உன்னோடு இருப்பது சுகம் 
என்று நினைத்தேன்..ஆனால்
உன் நினைவோடு இருப்பது தான்
சுகமாக இருக்கிறது அன்பே...
*********************************


நீ பிரிந்து சென்றது கூட
எனக்கு வருத்தமில்லை...
என்னை நேசித்த உன் இதயத்தை
எங்கே கழற்றி வைத்தாய்
என்று மட்டும் சொல்லிவிட்டு செல்....!



***********
என் மௌனத்தின் அர்த்தமே
உனக்குப் புரியாத போது
என் கண்ணீரின் அர்த்தமா
உனக்குப் புரியப் போகிறது..???

நீ இருக்கும் இடத்தில் நான் இல்லை என்றாலும்
உன் நினைவில் நானும் என் நினைவில் நீயும்
நம் நினைவில் நம் காதலும் விடை கிடைக்கா வாழ்க்கையின் விம்பங்களாக தொடரட்டும் எப்போதும்...



யாரென்றே தெரியாத
பெண்ணிற்க்காக.....!
நான் நின்று காத்திருக்கிறேன்...!!
என் காதலுடன்

***********

மௌன விரதம் என்றாய்
என்னிடம் பேசக்கூடாதென்றால்
கண்களையும் மூடிக்கொள்.....

***********

மலர் எங்கிருந்தாலும்
அதான் வாசனை காற்றோடுதான்...
அதுபோல
நீ எங்கிருந்தாலும்
உன் நினைவுகள் என்னோடுதான்...

***********

நான்
சாம்பலாக போகத் தயார்
நீ நெற்றியில்
இட்டுக்கொள்வதென்றால்!!!!

***********

நான் ஒரு ஓவியன்,
ஆனால் உன்னை நான் வரைய முடியவில்லை
ஏன் தெரியுமா?
ரோஜாவை வரைந்துவிடலாம்,
ஆனால் அதன் வாசத்தை எப்படி வரைய முடியும்....
***********
பேசும் வார்த்தை விட பேசாத மௌனத்திற்கு அதிகம் அர்த்தம் உண்டு! 
பேசும் வார்த்தை எல்லோருக்கும் புரியும் 
அனால், 
மௌனம் உன்னை நேசிபவர்களுக்கு மட்டும் தான் புரியும் .!
***********
காதல் தோல்விகள் சாவதற்கு அல்ல வாழ்வதற்கே ....
காதலில் தோற்கும் போது எல்லோருக்குமே கவலைதான் ஆனால் இது தோல்வி அல்ல வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு காதல் கற்று தரும் பாடம் என்பது பலருக்கு புரிவதில்லை ....
ஒருமுறை தோற்றால் மரணம் என்பதில்லை காதல்
***********

***********
நேற்று வரை வெள்ளை காகிதமாய் இருந்தேன் , நீ வந்த பின்பு உண் நினைவு என்னும் எழுத்துக்களால் அழகிய கவிதை புத்தகமானேன் ...

***********

உன்னிடம் இல்லை என்பதால் தான் திருடிக்கொண்டு சென்று விட்டாயோ என் இதயத்தை ..............

***********

உன் உதடுகளை கண்ட பின்புதான் தெரிந்து கொண்டேன் , ரோஜா இதழ்களும் பேசும் என்று .....

***********

இதயத்தை இரும்பாகதான் வைத்திருந்தேன் , யாருக்கு தெரியும் உண் கண்கள் காந்தம் என்று .....

***********
அன்று உன் புன்னகையில்
என்னைத் தொலைத்தேன்.....!
இன்று நீ போய்விட்டாய்
தொலைத்த என்னைத் தான்
காணவில்லை.....!



உன் இதயம் துடிக்கும் ஒவ்வொரு நொடியும் நான் ரசித்து கொண்டிருப்பேன் , ஏன் என்றால் துடிப்பது உண் இதயம் என்றாலும் இருப்பது என்னிடம் என்பதால் ....

***********
உன்னை மறந்தால் மறுபடி நினைப்பேனா?
தெரியவில்லை…
எனக்குதான் உன்னை மறக்கவேத் தெரியாதே!



நான் உன்னுடன் பேசிய வார்த்தைகளைவிட , உன்னை நினைத்து என்னுள் நான் பேசிய வார்த்தைகளே அதிகம் ...

***********
அவன் நினைவுகளே வாழ்க்கை
என்று ஆன பிறகு
அவன் தொடும் தூரத்தில் இருந்தால் என்ன
தொலை தூரத்தில் இருந்தால் என்ன
என் காதல் ஒரு விதமான வலி கலந்த
சுகம்தானே......!


என் வாழ்க்கையில் நீ கிடைக்க வேண்டும் என்பது காதல் அல்ல,
என் வாழ்க்கையாகவே நீ கிடைக்க வேண்டும் என்பதுதான் காதல் ...............

***********

அமைதியான இரவு.. சில்லேன்ற காற்று.. அலைகளின் தாளம்.. படகு மறைவில் காதல் ஜோடிகள்.. இருவர் மட்டும் வெட்டவெளில்.. அவன் தோளில் அவள் தலை சாய்ந்து விசும்பி கொண்டு இருக்கிறாள்.. சமுகம் அவர்களை கேலி செய்தது கள்ள காதல் என்று.. எத்தனை பேருக்கு புரியும் அவளின் கண்ணிர் ஆழமான நட்பின் வெளிப்பாடு என்று??!!!

***********

எத்தனையோ பெண்கள் அழகாய் இருக்கலாம் ஆனால் நீதான் என்னை அழகாக்கியவள். என்னால் சொல்லமுடியாத எவ்வளவோ காதலை நீ சாதாரணமாய் சொல்லி விடுகிறாய் ... உன் ஒரு பார்வையில்.

***********

உன் நட்பை நேசித்து நான் கவிதை எழுதுகிறேன் .....! ஆனால் என் கவிதை கூட என்னை நேசிக்காமல் உன் நட்பையே நேசிக்கிறது என்னை போலவே .....!

***********

உன்னை பார்க்க தூண்டும் என் கண்களுக்கு எப்படி புரிய வைப்பேன்!!!!!!!!!!! நீ என் இதயத்தில் இருக்கிறாய் என்று .....................

***********

கவிதை எழுதுவது கடினம் என்பார்கள் ... அவள் கண்களை பார்த்த பின்பு ஒரு நூலகமே அமைத்துவிட்டேன் வீட்டில் இல்லை ....என் இதயத்தில் ..........

***********

விண்ணில் நிலவுக்கும் ஒரு நாள் விடுமுறை உண்டு .. ஆனால் என்னில் உண் நினைவுக்கு என்றும் விடுமுறை இல்லை

***********

மலரே உன் மீது இருக்கும் துளிகள் பனித்துளி என்று நினைக்காதே .... நீ வாடாமல் இருக்க நான் சிந்திய கண்ணீர் துளிகள்.........

***********

உன்னோடு பேச முடியவில்லை......?? உன்னை பார்க்க முடியவில்லை........!!! இருந்தும் உன் உயிர் தேடும் என் ஆக்சிஜென்......!

***********

" மரணம் " கூட எனக்கு மறந்து போகலாம் மனதிற்கு பிடித்த " நீ " அருகில் இருந்தால் .... !!!

***********

என் மனசுக்குள் இருக்கும் உன் பாசம்... என் மரணம் வரை உன்னிடம் பேசும் ...........

***********

தோல்வியின் சின்னம் தாஜ்மஹால் வெற்றியின் சின்னம் இதுவரை இல்லை ஏன் என்றால்...... ஜெயித்தவன் காதலை மதிப்பது இல்லை தோற்றவன் காதலை மறப்பதில்லை

***********

உனக்காக உருகுவதில் எனக்கொன்றும் வருத்தமில்லை... இருந்தும் என் வருத்தம் அறியாமல் நீ இருப்பதில் தான் என் வருத்தம்..............!

***********

எழுதவில்லை உன் நட்பை .. செதுக்கி வைத்திருக்கிறேன் என் இதயத்தில்.. அந்த வலியினால்தான் என்னவோ, என் இதயம் துடிக்கின்றது.

***********

யார் யாரோ அணைத்து மகிழ்ந்தாலும் அணைத்து கொடுத்தாலும் இறுதியில் அன்னையை தேடும் சிறுகுழந்தையை போல் உன்னையே தேடுகிறது இதயம் !!!!

***********

அழகான பொருட்களெல்லாம் உன்னை நினைவு படுத்துகின்றன. உன்னை நினைவுபடுத்துகிற எல்லாமே அழகாகத்தான் இருக்கின்றன..

***********
உன்னை மறந்த இதயத்தை நினைத்து கொண்டு, உன்னை நேசிக்கும் இதயத்தை இழந்து விடாதே.........

***********

என் மரணத்தின் வலி அது ஒரு நொடியில் முடிவும் தூக்கு-தண்டணை! உன் மௌனத்தின் வலி அது உயிருடன் கொள்ளும் ஆயுள்-தண்டணை!..........

***********

என் உயிர் போனால் உனக்கு கண்ணீர் வருமா என்று எனக்கு தெரியாது .. ஆனால் உனக்கு கண்ணீர் வந்தாலே என் உயிர் போய்விடும் ................

***********

உண்மையான அன்புக்கு ஏமாற்ற தெரியாது................. ஏமாற மட்டுமே தெரியும்

***********

என் ஆயுள் முழுதும் உன் நட்பு வேண்டும் !!!! இல்லை என்றால் ...... உன் நட்பு உள்ளவரை எனக்கு ஆயுள் போதும்!!.........

***********

போ என்று சொன்னாலும் உன் நிழல் உன்னை விட்டு போகாது. அதை போன்றதுதான் என் அன்பும் ...

***********

பொய் சொல்லாமல் காதலிப்பதில்லை ஆண்கள், உண்மை சொல்லும் போது ஏற்பதில்லை பெண்கள்...!

***********
அறிமுகம் இல்லாமலே பழகினோம் 
உறவுக்கும் மேலாக உறவானோம்... 
உயிருக்கும் மேல உயிராக நேசித்தோம் 
இன்று ..
***************
இதமான மிதமான சூட்டில் மூச்சுக்காற்றைப் போல் 
காதல் சுகமானது
***************
மாலை ஓய்ந்து மதி பொங்கும் வேளை 
பாலைவனக் கழுகாய் காத்திருக்கிறேன் உனக்காய் 
சோலை வந்த தென்றலாய் நீ வருவாயென...
***************
ஒரு துளிக் கண்ணீர் தானே விடுகிறேன் என நினைக்காதே அது ஒருதுளி கண்ணீர் என்ற நிறமற்ற இரத்தம் !!!
***************
அன்புக்காக ஏங்கும் என் இதயத்தை உன்னோடு அனுப்பி இருக்கிறேன் நீ என்னை விரும்பாவிட்டாலும் பரவாயில்லை தயவுசெய்து என் இதயத்தை மட்டும் திருப்பி அனுப்பிவிடாதே !!
**************
நீ என்னோடு பேசமாட்டாய் என தெரிந்தும் பேசிக்கொண்டு இருக்கிறேன் தனிமையில் உன் நினைவுகளோடு !!!
**************
கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே
கரை சேர்க்க வேண்டும் என்பேன் நீயே
என்னை நீ வெறுத்தால் என்னாகும் என்று 
நினைத்து தான் பாரேன் நெஞ்சத்தை கேளு
முள்ளில் ஆடும் பார்வை நான் தானே 
பறவை நானே.
***************
மின்மினி பூச்சிகள் போல மின்னுகிறது
உன் கண்கள்....
நீ ஒவ்வொரு முறை சிமிட்டும் போதும்
உன் கண்களின் கொள்ளை அழகை
கொள்ளையடிக்கும் காதல் கள்வன் நானே........
எப்பொழுதும் பார்த்துக் கொண்டிருப்பேன் உன்னை
என் இதயம் எனும் கண்ணாடியில்............
என் அலட்சியங்கள்
லட்சியங்கள் ஆகிறது...
அன்பே நீ என் அருகில் இருப்பதால்

****************
உறவை வளர்க்க கனவை கொடுத்தாய்
நினைவில் மலர்ந்து உயிரில் கலந்தாய்- இன்று
பிரிவை கொடுத்து உணர்வை பிழிந்து 
வலியை ஏன் கொடுத்தாய்
***********
வந்துவந்து போகும் எத்தனையோ உறவுகளுக்கு மத்தியில் என் இதயத்தில் வந்து இதுவரை செல்லாத உறவும் நீதான் என்னைவிட்டு சென்றபின் இதுவரை வந்து சேராத உறவும் நீதான் !!
***********

ரோஜாவை பறிக்கும்போது உண்டான முள்ளின் காயம் .. நீ வாங்க மறுத்த போதுதான் வலித்தது .............

***********

மீண்டும் ஒருமுறை என்னை திரும்பி பார்க்காதே இழப்பதற்கு என்னிடம் இல்லை இன்னொரு இதயம் ...................

***********

காகிதம் கூட ஆயுதம் என்று அறிந்தேன் அவளுடைய திருமண அழைப்பிதழை நீட்டியபோது...

***********

தோல்வியின் சின்னம் தாஜ்மஹால்
வெற்றியின் சின்னம் இதுவரை இல்லை
ஏன் என்றால்......
ஜெயித்தவன் காதலை மதிப்பது இல்லை
தோற்றவன் காதலை மறப்பதில்லை

***********

நான் உயிரோடு இருப்பது எல்லோருக்கும் தெரியும்... ஆனால் என் உயிர் உன்னோடு இருப்பது யாருக்கு தெரியும்... உன்னை தவிர

***********

உன்னோடு பேச ஒரு நிமிடம் கிடைத்தால் போடும், கண்ணோடு இருக்கும் கண்ணீர் மட்டுமல்ல என்னோடு இருக்கும் கவலைகளும் தீர்ந்து விடும்...

**********
என் காதலி என்னை ஏமாற்றவில்லை , மாறாக பக்குவபடுத்தி இருக்கிறாள் . இதை போல யாரிடமும் ஏமாறாதே என்று ....
**********

உன்னை கண்ட நாள் முதல்
நான் கவிஞன் ஆகினேன் !
நீ கவிதை ஆகிறாய் !
………………………………………………………………………..
நீ தோழிகளோடு பல்லாங்குழி
ஆடுகையில் – உன்
ஒவ்வொரு காய் நகர்த்தலிலும்
புளியாங் கொட்டையும்
புதுக் கவிதையாகிறது !
…………………………………………………………………………..
எந்த ஒரு காரணமும்
தேவை இல்லை
நீ என் மேல்
கோபித்திருப்பதற்கு ! – உன்
ஒவ்வொரு அசைவும்
காரணம் தான்
நான் உன்னை
காதலித்து இருப்பதற்கு !
…………………………………………………………………………….
நீ நகர்கிற திசையில்
எந்தன் பாதை !
…………………………………………………………………………….
அதிகம் தேவை இல்லை – நீ
கலைந்த உன் நெற்றி
முடிதனை கோதினால் போதும் ,
என் தவம் கலையும் !
…………………………………………………………………………….
நிசப்தமான இரவினில்
யாருமற்ற வீதியில்
என்னைப் பின்தொடர்ந்தாள்
அவள் – வெண்ணிலவாக !
……………………………………………………………………………..
காற்றோடு கொடியசைய,
கொடியோடு பூவசைய ,
பூவோடு வண்டசைய !
அவ் வண்டுண்ட
தேன் கொண்டு – என்
தொண்டை நினைத்தாலும்
உன் முத்தத்திற்க்
ஈடேறி நிற்காது என்பேன் !
எப்போதும் உன்
முத்தத்தை உண்பேன் !
……………………………………………………………………………..
எத்தனை வரிகள் தான்
உன்னைப் பற்றியே எழுதுவது ?
என்னைப் பற்றிய
ஒரு வரி கவிதை – இதோ
” உன் காதலன் ! ” – போதாதா இது !

**********
“நிசப்தமான இரவினில்
யாருமற்ற வீதியில்
என்னைப் பின்தொடர்ந்தாள்
அவள் – வெண்ணிலவாக !”

******************

உறவுகளை அறிமுகப்படுத்தி, உயிரை உணரவைத்து, காதலைக் கற்றுக்கொடுத்து, நட்பை சொந்தமாக்கி, தோல்விகளை தூரத்தள்ளி, வெற்றிக்கு வடிவமைத்து, சதையை உடலாக்கி, உணர்வை உயிராக்கி, என்னை நானாகவும், என்னை நீங்களாகவும், பார்க்கும் உங்களுக்காக மட்டும் எதையும் மாற்றிக்கொள்வெண்

real Fact

உண்மையான அன்பு கிடைக்கும்போதுதான் உன்னையே உனக்குப் பிடிக்கும்