Sunday, January 22, 2012

ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை

ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை.............................................................................................................................................................
வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை. இது குறித்து மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாடமியின் பயிற்சியாளர் ஏ.நரசிம்மமணி கூறியதாவது:* பகலில் முகப்பு விளக்குகளை
எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.
* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லது
வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.
* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து
விளக்குகளையும் எரியவிடக் கூடாது.
* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.
* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருத
வேண்டும்.
* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த
அழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.
* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.
* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே "டிம்' செய்ய வேண்டும்.
* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு "இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.
* கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது
சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.
* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளி
வராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் "அப்சர்வ்'
செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.
* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் "சிக்னல்' இல்லாத இடங்களிலும், மொபைலின் "கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், ஏன் "சிம்கார்டு'
இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

Thursday, January 19, 2012

காதலை மறுப்பதில் உறுதியாக இருங்கள்

காத‌லி‌ப்ப‌தி‌ல்
எ‌வ்வளவு
உறு‌தி
வே‌ண்டுமோ
அதை
‌விட
காதலை
மறு‌ப்ப‌திலு‌ம்
உறு‌தியாக இரு‌க்கவே‌ண்டு‌ம்.அதுதா‌ன்
இருவரது வா‌ழ்‌க்கையையுமே ந‌ல்ல முறை‌யி‌ல் கா‌ப்பா‌ற்ற உதவு‌ம்.

ஒருஇளைஞன் ஒருபெண்ணிடம் வந்து தனது காதலை சொல்லும் போது அதற்கு மூன்று பதில்கள் இருக்கலாம்.

எந்தபதிலாகஇருந்தாலும்,உடனடியாகஅந்த இளைஞனிடம் அதனை உறுதியாக சொல்லிவிடுவது நல்லது.

அதுஎன்னமூன்றுபதில்கள்,ஒன்ற
ஆம்,
நானும்
உங்களை
காதலிக்கிறேன்,
இர‌ண்டாவது
ப‌தி‌ல்
எனக்கு
யோ‌சி‌க்க
கொஞ்சம்
கால
அவகாசம்
வேண்டும்,
மூன்றாவது
இல்லை.
எனக்கு
உங்கள்
மீது
காதல்
இல்லை
என்பதுதான்.


முதல்
மற்றும்
இரண்டாம்
பதில்களுக்கு
பெரும்பாலும்
ஆம்
என்ற
ஒரே
அர்த்தம்தான்
வரும்.
அதாவது
காதலிக்கிறேன்,
நன்கு
யோசித்து
சொல்கிறேன்
என்றால்,
யோசிக்கும்
இடத்தில்
அவர்
இருக்கிறார்
என்றுதானே
அர்த்தம்.


அப்படி
யோசித்து
இல்லை
என்றாலும்
அதை
உடனடியாக
கூறி
விட
வேண்டும்.
ஆனால்
இல்லை
என்ற
பதிலை
உடனடியாக
கூறி
விடுவது
ஒருவரின்
வாழ்க்கையை
காப்பாற்றும்.


ஒரு
இளைஞனை
காதலிக்க
முடியாது
என்ற
பட்சத்தில்,
அவரிடம்
உங்களை
காதலிக்க
முடியாது
என்று
மறுத்து
விடுவது
நல்லது.
அதைவிடுத்து,
காதல்
கடிதம்
கொடுத்த
பின்னரும்
எந்த
மாற்றமும்
இல்லாமல்
அவருடன்
ஊர்
சுற்றுவது,
பேசுவது
என்று
இருந்துவிட்டு
கடைசியாக
இதெல்லாம்
செஞ்சா
காதலிக்கிறேன்
என்று
அர்த்தமா
என
கேள்வி
கேட்கக்
கூடாது.


இதனால்
அந்த
நபரின்
மனம்
பெரிதும்
பாதிக்கப்படும்.


மேலும்,
காதலை
மறுப்பதை
தெளிவாக
செய்ய
வேண்டும்.
தனக்குப்
பிடிக்காதவன்
காதல்
கடிதம்
கொடுத்தால்,
உடனே
பெற்றோரிடம்
சொல்லி
சண்டைபிடிக்க
வைக்கக்
கூடாது.


அப்போதே
அவனிடம்
தெளிவாக
எனக்கு
உன்னைப்
பிடிக்க
வில்லை.
இது
பற்றி
நான்
யாரிடமும்
கூற
மாட்டேன்.
இனி
என்
பின்னால்
சுற்றுவதை
நிறுத்திவிடு
என்று
கூறலாம்.

மேலும்,காதலைச்
சொன்னவரின்
மனம்
புண்படாதவாறு,
தனது
நிலையை
எடுத்துச்
சொல்லி
காதலில்
தனக்கு
உடன்பாடில்லை
என்பதை
நாகரிகமாகச்
சொல்லலாம்.



காதலை
மறுப்பதில்
உறுதியாக
இருக்க
வேண்டும்.
அதிலும்,
அதனை
நாகரீகமாக
மறுப்பதும்
முக்கியம்.
அவரிடம்
வேண்டாம்
என்று
கூறிவிட்டு,
மற்றவரிடம் எங்கே
அவரை பல நாட்களாக
காணவில்லை -என்று
விசாரிப்பதும் கூட தவறு..
அது
அந்த நபரின் காதிற்க்கு
போனால்?
மீண்டும்
உங்கள் மீதான காதல்
உங்களை தேடி வ்ர தூண்டும்...
அதனால்
காதலை மறுப்பதில்
உறுதியாக இருங்கள் ..
அது ஒரு வாலிபனின் வாழ்க்கையை
மட்டுமல்ல..
அவனை நம்பி இருக்கும்
பல உறவுகளை
காப்பாற்றும்...

பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம்

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
சிந்தனையைத் தூண்டும் தத்துவப் பாடல்கள் எழுதி, திரை உலகில் கொடி கட்டிப் பறந்தவர் பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் கிராமத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 13-4-1930-ல் பிறந்தார். தந்தை பெயர் அருணாசலக் கவிராயர். தாயார் விசாலாட்சி. இந்த தம்பதிகளுக்கு 6 குழந்தைகள். இவர்களில் 4-வதாகப் பிறந்தவர் கல்யாண சுந்தரம். மூத்தவர் கணபதி சுந்தரம்.

உள்ளூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் அண்ணன் கணபதி சுந்தரத்துடன் கல்யாணசுந்தரம் அரிச்சுவடி பயின்றார். அதோடு பள்ளிப்படிப்பு முடிந்தது. 2-ம் வகுப்புக்குப் பிறகு பள்ளிக்கு போகவில்லை.

அண்ணனிடமே சில ஆண்டுகள் அடிப்படைக் கல்வியையும், நாட்டு நடப்புகளையும் கற்றார்.

தந்தை அருணாசல கவிராயர் கவிதை எழுதும் ஆற்றல் உடையவர். தந்தையைப் போலவே கணபதிசுந்தரமும் கவிதை பாடுவதில் வல்லவர். சிறந்த ஓவியராகவும் விளங்கினார். அத்தகைய அண்ணனின் அரவணைப்பில் வளர்ந்த கல்யாணசுந்தரம் தினமும் கவிதை புனையும் ஆற்றல் இயல்பாகவே அமைந்துவிட்டது.

இளம் வயதிலேயே, பாடல்களைப் பாடுவதில் கல்யாணசுந்தரம் ஆர்வமாக இருந்தார்.

நாடகம் பார்ப்பது, சினிமா பார்ப்பது, பிறகு பார்த்துவிட்டு வந்தவற்றில் கேட்ட பாடல்களை வரி பிசகாமல் பாடிக்கொண்டிருப்பது கல்யாணசுந்தரத்தின் விருப்பமான பொழுதுபோக்காக இருந்தது. பொது நிகழ்ச்சிகளுக்கும் சென்று வந்தார். பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளும் கம்ïனிசக் கொள்கைகளும் அவரை வெகுவாகக் கவர்ந்தன.

இதனைத் தொடர்ந்து இளம் வயதிலேயே மேடைப் பாடகரானார். கம்ïனிஸ்டு கட்சி கூட்டங்களிலும், பிற நிகழ்ச்சிகளிலும் பாட்டுக்கட்டிப் பாடுவது அவரது பணிகள்.

'நல்லதைச் சொன்னா நாத்திகனா?'- இதுதான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் முதல் பாடலாகும். இதை எழுதி அண்ணன் கணபதி சுந்தரத்திடம் காட்டி அவரது பாராட்டை பெற்றார்.

பகுத்தறிவு பாடல்களை பாடுவதில் திறமை பெற்றிருந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அதிராம்பட்டணத்தில் தி.மு.க. மேடையில் ஏறி பாடி இருக்கிறார்.

சினிமா சிந்தனை மேலோங்க கல்யாணசுந்தரம் கிளம்பி சென்னைக்கு வந்தார். அக்காலத்தில் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த டி.எஸ்.துரைராஜ் சேலம் மாடர்ன் தியேட்டர் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். 'நாங்கள் எல்லாம் நாடகத்தில் நடித்துவிட்டுத்தான் சினிமாவுக்கு வந்தோம். நீயும் முதலில் நாடகம் நடித்து விட்டுப் பின்பு சினிமாவுக்கு வருவதுதான் சிறந்தது' என்று டி.எஸ்.துரைராஜ் ஆலோசனை கூறியதோடு சிபாரிசு கடிதம் கொடுத்து சக்தி நாடக சபாவுக்கு அனுப்பி வைத்தார்.

முதலில் நாடகத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு தரவில்லை. நாடக சபாவுக்கான ஆயத்த வேலைகளையே செய்து வந்தார். பின்னர் அவரது குட்டிக்கதைகளையும், பாடல் திறமையையும் அறிந்ததால், நடிக்க வாய்ப்பு கொடுத்தனர். 'என் தங்கை', 'கவியின் கனவு' ஆகிய நாடகங்களில் நடித்தார்.

'கவியின் கனவு' நாடகத்தில் முக்கியமான ராஜகுரு வேடமேற்று நடித்து வந்த எம்.என்.நம்பியார் சபாவில் இருந்து விலகி விட்டதால், அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கல்யாணசுந்தரத்துக்கு கிடைத்தது. அந்த கதாபாத்திரம் அவருக்கு புகழைத் தேடிக்கொடுத்தது. அப்போது `ஏ.கே. சுந்தரம்' என்றே அழைக்கப்பட்டார்.

1954-ம் ஆண்டில் டி.கே.பாலசந்திரன் தயாரித்த 'கண்ணின் மணிகள்' என்ற நாடகத்தில் கல்யாணசுந்தரம் போலீஸ்காரர் வேடமேற்று நடித்தார். அந்த நாடகத்தில் அவர் எழுதிய, 'தேனாறு பாயுது. செங்கதிரும் சாயுது - ஆனால் மக்கள் வயிறு காயுது' என்ற பாடல் பிரபலமானது. இந்த பாட்டுத்தான் பின்னர் சில புதிய கருத்துக்களோடு 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' சினிமாப் படத்திலும் இடம் பெற்றது.

பிறகு புதுச்சேரி சென்று தனது மானசீக குருவான பாரதிதாசனை சந்தித்தார். ஏற்கனவே அறிமுகம் ஆகி இருந்த கல்யாணசுந்தரத்தை அவர் தன்னுடன் தங்கி இருந்து 'குயில்' ஏட்டை வெளியிடும் பணியில் ஈடுபடுமாறு கூறினார். அதன்படியே பாரதிதாசனின் விருப்பத்தை நிறைவேற்றினார்.

அந்த சமயத்தில் பாரதிதாசன் எழுதும் கவிதைகள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் சமூகப் பார்வையை கூர்மைப்படுத்தியது எனலாம். பாரதிதாசனிடம் மாணவராக இருந்து கவிதை இலக்கணங்களை கற்றுக்கொண்டார். பல நல்ல கவிதைகளை எழுதி பாராட்டும் பெற்றார்.

மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்திற்கு வசனம், பாடல் எழுதும் பணியில் பாரதிதாசன் ஈடுபட்டிருந்தார். கல்யாண சுந்தரத்தையும் பாட்டு எழுதுவதற்காக அங்கு அழைத்துச் சென்றார். அந்த சந்தர்ப்பத்தில் மாடர்ன் தியேட்டர்சாருடன், பாரதிதாசனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு திரும்பினார். உடனே அவரோடு கல்யாணசுந்தரமும் புறப்பட்டார். ஆனால் பாரதிதாசன், கல்யாணசுந்தரத்தை தட்டிக்கொடுத்து 'நீ முன்னேற வேண்டியவன். பொறுத்துக்கொண்டு இங்கேயே இரு' என்று சொல்லி விட்டு போனார்.

குருவின் கட்டளையை ஏற்று கல்யாணசுந்தரம் சேலத்திலேயே தங்கி இருந்து, மாடர்ன் தியேட்டர்ஸ் சினிமா படங்களுக்கு பாடல் எழுதினார். இப்படி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கவிதை வளர்ச்சிக்கும், திரைப்பட உலக பிரவேசத்துக்கும் துணையாக பாரதிதாசன் விளங்கியதால் தன்னுடைய கவிதை, கடிதம் எதுவாக இருந்தாலும் முதலில் 'பாரதிதாசன் துணை' என்று எழுதும் வழக்கத்தை கையாண்டார். சில பாடல் எழுதும்போது 'வாழ்க பாரதிதாசன்' என்றும் எழுதி இருக்கிறார்.

1950-ம் ஆண்டுவாக்கில் சினிமாவுக்கு பாட்டெழுதுவதில் கண்ணதாசன், மருதகாசி, உடுமலை நாராயணகவி போன்றோர் பிரபலமாக இருந்தார்கள். அந்த காலகட்டத்திலேயே கல்யாணசுந்தரமும் நுழைந்தார். 1954-ல் கல்யாணசுந்தரம் 'படித்த பெண்' என்ற படத்துக்குத்தான் முதன் முதலாக 2 பாடல்கள் எழுதினார். ஆனால் அந்தப் படம் வெளிவர தாமதமானது.

இதனால் அவர் பாடல் எழுதி முதலில் வெளிவந்த படம் 'மகேஸ்வரி' என்பதாகும். இந்தப்படம் 13-11-1955-ல் வெளிவந்தது. அதற்கு அடுத்து 20-4-1956-ல் 'படித்த பெண்' வெளிவந்தது. மகேஸ்வரி படத்தில் கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்: 'அறம் காத்த தேவியே, குலம் காத்த தேவியே! - நல் அறிவின் உருவமான சோதியே கண் பார்த்து அருள்வாயே அன்னையே! அன்னையே!' என்பதாகும்.

1956-ம் ஆண்டில் வெளிவந்த 'பாசவலை', 'ரங்கோன் ராதா', 'மர்மவீரன்' போன்ற படங்களுக்கு பாடல் எழுதினார். பின்னர் 1957, 1958-ம் ஆண்டுகளில் எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் நடித்த படங்களிலும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் இடம் பெறத்தொடங்கின.

சுமார் 6 ஆண்டு காலத்தில் 57 சினிமாப்படங்களுக்கு 186 பாடல்களை எழுதினார், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.

Tuesday, January 17, 2012

What are the habits that changed your life?

What are the habits that changed your life?


Developing good habits is the basic of personal development and growth. Everything we do is the result of a habit that was previously taught to us. Unfortunately, not all the habits that we have are good, that's why we are constantly trying to improve.

The following is a list of 30 practical habits that can make a huge difference in your life.

You should treat this list as a reference, and implement just one habit per month. This way you will have the time to fully absorb each of them, while still seeing significant improvements each month.

Health habits

1.   Exercise 30 minutes every day. Especially if you don't do much movement while working, it's essential that you get some daily exercise. 30 minutes every day are the minimum recommended for optimal health.
2.   Eat breakfast every day. Breakfast is the more important meal of the day, yet so many people skip it. Personally, I like to eat a couple of toasts in the morning along with a fruit beverage.
3.   Sleep 8 hours. Sleep deprivation is never a good idea. You may think that you are gaining time by sleeping less, when in reality you are only gaining stress and tiredness. 8 hours are a good number of hours for most people, along with an optional 20 minutes nap after lunch.
4.   Avoid snacking between meals. Snacking between meals is the best way to gain weight. If you are hungry, eat something concrete. Otherwise don't. Update: for clarification, I mean don't eat junk food between meals, but eating real food its ok.
5.   Eat five portions of fruits and vegetables every day. Our body and brain loves getting vegetables and fruit, so I highly recommend eating as much of them as possible. Five portions is the dose that's usually recommended by many health associations.
6.   Eat fish. Fish is rich of omega 3 and other healthy elements. At least one meal per week of fish should be enough for getting all these nutrients.
7.   Drink one glass of water when you wake up. When you wake up, your body is dehydrated and needs liquid. Make the habit of drinking one glass of water after you wake up in the morning. Also, drink more during the day.
8.   Avoid soda. Soda is often one of the most unhealthy beverage you can find. Limit your consumption of soda as much as possible and you're body will be grateful for that.
9.   Keep your body clean. I don't advise spending your day in front of the mirror, but a minimum of personal care does never hurt.
10. If you smoke, stop it. There's no reason to smoke anymore, and quitting is possible.
11. If you drink, stop it. Same as above. Don't think that alcohol will solve your problems. It never does. The only exception is one glass of wine per day during meals.
12. Take the stairs. This is just a hack that forces you to do a minimum of exercise. I
nstead of taking the elevator, take the stairs.
 
Productivity  Habits

1.    Use an inbox system. Make the habit of keeping track of all the ideas and things that comes to mind. You can use a notebook to do this, and then sync everything on your computer.
2.    Prioritise. If you have a list of things to do, where do you start? One way is to prioritise your list. If you are in doubt, ask yourself: If I could only accomplish one thing today, what would it be?
3.    Plan, but not too much. Planning is important, and you should decide in advance what you are going to do today or this week. However, planning for more than a few weeks is usually inefficient, so I would not worry too much about that.
4.    Wake up early. Waking up early in the morning is a great way to gain extra time. I personally like to wake up at 5 am, so that by 9 am I have already accomplished what otherwise would have taken me many days..
5.    Check your email only twice per day. Email can easily become an addiction, but it's usually unnecessary to check it every 10 minutes. Make an effort and check your email only once or twice per day, see if the world will still rotate as before after you try this.
6.    Eliminate unimportant tasks. Being busy all day does not mean you are doing important stuff. Eliminate every activity that's not important, and focus on what really matters.
7.    Clean off your desk and room. Having a clear room and desk is important to maintain focus and creativity.
8.    Automate. There are a lot of tasks that you need to perform every day or every week. Try to automate them as much as possible.
9.    Set strict deadlines. When you do something, decide in advance when you're going to stop. There's a rule that states that you will fulfil all the time you have available for completing a task, so make an habit of setting strict deadlines for maximising your productivity.
10. Take one day off per week. Instead of working every day, take one day off per week (for example Sunday) where you are not going to turn on your computer. Use that time for doing recreational activities like going for a walk.

Personal Development habits

1.    Read 1 book per week. Reading is a good way to keep your brain active. With just 30 minutes per day you should be able to read one book per week, or more than 50 books per year.
2.    Solve puzzles. Quizzes, word games, etc. are all good ways to exercise your brain.
3.    Think positively. You are what you think, all the time.
4.    Make fast decisions. Instead of thinking for one hour wherever you are going to do something, make your decisions as fast as possible (usually less than 1 minute).
5.    Wait before buying. Waiting 48 hours before buying anything is a tremendous money saver, try it.
6.    Meditate 30 minutes per day. A great way to gain clearness and peace is through meditation. 30 minutes are not a lot, but enough to get you started with meditation.

Career habits

1.    Start a blog. Blogging is one of the best way to put your word out. It doesn't have to be around a specific topic, even a personal blog will do.
2.    Build a portfolio. If your job is creating stuff, building a portfolio is a great way to show what you are capable of. You can also contribute stuff for free if that applies to your work.

What do you think? What are the habits that changed your life?

அறியாத சில விசயங்கள்

அறியாத சில விசயங்கள்

*மெக்டொனால்ட் நிறுவனம், மாதத்திற்கு சராசரியாக 110,000 ஐஸ்கிரீம் கோன்களை விற்பனை செய்கிறது.

*திருப்பதி தேவஸ்தானத்தின் ஆண்டு வருமானம் 530 கோடி ரூபாய்கள். இதுவே இந்தியாவில் அதிக வருமானம் கொண்ட டிரஸ்ட் ஆகும்.

*இரண்டு நாளைக்கு ஒருமுறை மீன் இறைச்சியை சாப்பிட்டால் மாரடைப்பு வருவது 30சதவீதம் குறையும் என ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


*காற்று வீசும் திசைக்கு எதிராகத் தனது மூக்கு இருக்கும்படியாகவே நாய் எப்போதும் படுக்கும். எதிரி வருவதை மோப்பத்தால் சுலபமாக உணரவே இவ்வாறு செய்கிறது.

*ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு வகை சிலந்திகள், மீன் பிடித்து உண்ணுகின்றன. நீர் நிலைகளின் அருகே இரண்டு கால்களில் நின்றபடி மற்ற ஆறு கால்களையும் மீனைப் பிடிக்கத் தயாராக வைத்திருக்கும். சிறு மீன்கள் கரை ஓரமாக வரும் போது பாய்ந்து பிடித்துக் கொள்ளும்.

*விமானத்தில் பயணம் செய்யும் போது, சாக்லேட் கொடுக்கின்றனர். ஏன் தெரியுமா? சில பயணிகளுக்குத் தலைச் சுற்றல், மயக்கம் போன்றவை விமானப் பயணத்தின் போது ஏற்படும். சாக்லேட்டில் உள்ள குளுகோஸ் இவை வராமல் தடுக்கிறது. அது மட்டுமல்ல... சாக்லேட்டின் வாசனையும், சுவையும் பயணிகளுக்கு வாந்தி வராமல் தடுக்கும். மஞ்சள் காமாலை வந்தவர்கள் உணவு விஷயத்தில் ஆர்வமின்றி இருப்பர். இவர்களின் சுவையையும், சக்தியையும் அதிகரிக்க இவர்கள் சாக்லேட் அல்லது புளித்த சுவை கொண்ட மிட்டாய் போன்றவற்றை சாப்பிடலாம். தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் போது ஒரு சாக்லேட்டைமென்றால், சோர்வு குறைந்து சுறுசுறுப்பாக எழுத முடியும்.

*மனிதனது மூளையில் ஏராளமான நுண்மடிப்புகள் உள்ளன. கட்டளை அல்லது செய்திகளைக் கிரகிக்கும் பகுதி மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது. சிலரது மூளை மடிப்புகள் மிகவும் அபாரமானவை. இவை கம்ப்யூட்டர்களைப் போல பணிபுரிவதுடன் அதி அற்புதமான கிரகிக்கும் ஆற்றலையும், நினைவாற்றலையும் கொண்டது. சிலர் இளமையிலேயே அதிபுத்திசாலிகளாக விளங்குவது இதனால்தான். சீரான ஒரு மூளையில் பல ஆயிரம் நுண்மடிப்புகள் உள்ளன என்கின்றனர் நரம்பியல் அறிஞர்கள்.

*நமது நாட்டில் 5 வயது சிறுவனாக இருந்தபோதே "ரவிகிரண்' என்பவன் 60க்கும் மேற்பட்ட ராகங்களைப் பிரித்து அறியவும், பின்னர் பாட்டு இசைக்கவும் அறிந்திருந்தான். அதிகமாகப் பாடங்களை கிரகித்து அறிந்து, பின் தேர்வில் மிகச் சிறப்பாக எழுதிவிடும் அற்புத மூளை படைத்த சிறுவர்களும் இருக்கின்றனர். இவர்களது மேதா விலாசத்தைக் கட்டிப்போட முடியாது.

இந்நிலையில்தான் பிரிட்டனில் உள்ள "கிளாஸ்கோ' பல்கலைக் கழகத்தில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த "வில்லியம் தாம்ஸன்' என்ற சிறுவன் பேராச்சரியப் படத்தக்க அறிவாற்றலுடன் விளங்கி, தேர்வுகளில் முதல் தர மதிப் பெண்களைப் பெற்றமையால் அவனுக்கு 10 வயதிலேயே பல்கலைக் கழக பட்டம் வழங்கப்பட்டது. இச்சிறப்பினை வேறு எவரும் பெற்றதே இல்லை. இவனே பிற்காலத்தில் "லார்ட் கெல்வின்' என்று அழைக்கப்பட்டு பிரிட்டனின் சிறந்த பேரறிஞனாக விளங்கி வந்தான். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது எத்தனை உண்மை பாருங்கள்!

*தேள் முட்டையிடுவதில்லை. குஞ்சு பொரிக்கிறது. குஞ்சுகள் தாங்களாகவே நடமாடும் பருவமடையும் வரை, தாய்த்தேள் தன் மார்பிலேயே அவைகளை வைத்துக் கொண்டிருக்கும்.

*சிங்கத்தின் வாலிலே இருக்கும் மயிர்க் கற்றையை விலக்கிப் பார்த்தால், முனையில் ஆணி போல் கடினமான ஒரு நகம் இருக்கும்.

*சுண்டெலிகள் பாடுகின்றன! மிகவும் உச்சஸ்தாயியில் பாடுவதாலேயே நாம் அதைக் கேட்க முடிவதில்லை. சில சமயங்களில் பாட்டின் ஒரு பகுதி கீழ்ஸ்தாயிக்கு இறங்கும் போது கேட்க முடிகிறது. ஆராய்ச்சியில் கண்ட உண்மை இது.

*ஆமைக்கு பல் கிடையாது. கனத்த ஈறு போன்ற அமைப்பாலேயே அது உணவுகளைச் சுவைத்து விழுங்குகிறது.

*முதலைக்கு மூக்கிலும் பல் உண்டு. முட்டைக்குள் உள்ள முதலைக்குட்டி மூக்கில் உள்ள பல்லால் உடைத்துக் கொண்டுதான் வெளியே வரும்.

*பிறக்கும்போது 1 பவுண்டு எடையுள்ள கரடிக்குட்டி ஒரு வயதை அடையும் போது அதன் எடை 100 பவுண்டாகி விடுகிறது.

*உணவு, நீர் எதுவும் இன்றி 15 நாட்கள் தாக்குப்பிடிக்கும் சக்தி குதிரைக்கு உண்டு.ஒரு வருடத்தில் தன் எடையைப் போல் பத்து மடங்கு உணவை குதிரை உட்கொள்கிறது.

*பெருங்குடல் புற்றுநோய் காரணமாக அமெரிக்காவில் 2003ல் 57,000பேர் இறந்தனர். இதே காலத்தில் இந்த நோயினால் 150,000 மக்கள் பாதிக்கப்பட்டனர். நுரையீரல் புற்றுநோய்க்கு அடுத்த இடத்தை இந்த நோய் பெறுகிறது.

*முன்னைய பிரிட்டீஷ் பிரதமர் சர்ச்சில் வளர்த்த கிளி ஒன்று இன்றும் உயிரோடு உள்ளது. சார்லி என்ற பெயருடைய அதற்கு 104 வயதாகிறது.

*பிரிட்டனைச் சேர்ந்த சோதனைச்சாலை தொழில்நுட்ப நிபுணரான ஜூலிவார்ட் என்ற 40வயது பெண்மணிக்கு முதல் பிரசவத்தில் ஒரு குழந்தையும் இரண்டாவது பிரசவத்தில் இரண்டு குழந்தைகளும் மூன்றாவது பிரசவத்தில் மூன்று குழந்தைகளும் பிறந்தன.

*மனோரஞ்சிதப் பூவுக்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் வழங்கப்படும் பெயர் "யாங்- யாலாங்". அதாவது 'பூக்களில் இதுவே பூ' என்று பெயர்.

*குவைத் என்றால் அரபி மொழியில் "சின்னக் கோட்டை".

*நமது நகம் சராசரியாக நாளொன்றுக்கு 1/250அங்குலம் வளர்கிறது.

*பிரான்ஸ் நாட்டில் பெண்களுக்கான அழகு நிலையம் ஒன்றில் எடை பார்க்கும் எந்திரம் ஒன்று இருக்கிறது. ரொம்பவும் குண்டான பெண்கள் ஏறிநின்றால், "மன்னிக்கவும், தங்கள் எடை......" என்ற சீட்டு வருகிறது.

*அமெரிக்காவில் வெஸ்ட் ரஞ்சு நகரில் தாமஸ் ஆல்வா எடிசனுக்கு நினைவுக்கூடம் ஒன்று இருக்கிறது. அங்கே அவர் விஞ்ஞானக் குறிப்புகள் எழுதிய நோட்டுப் புத்தகங்களை வைத்திருக்கிறார்கள். மொத்தம் 25,000 நோட்டுப் புத்தகங்கள்.

*மேற்கிந்தியத் தீவுகளில் முன்பெல்லாம் கீரிப்பிள்ளை கிடையாது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து வளர்த்தார்கள். எதற்குத் தெரியுமா? பாம்புகளின் எண்ணிக்கை பெருகிவிட்டதால் அவற்றை ஒழிக்க

Thursday, January 12, 2012

இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸன் - Idly Dosa - Slow Poison

இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸன் - Idly Dosa - Slow Poison

என்ன தலைப்பை பார்த்து பயந்துவிட்டீர்களா, ஆம் இது பெரிய உண்மை. பரோட்டா மைதாவினால் செய்த பன்டம் அதில் உள்ள கெமிக்கல் உடம்புக்கு நல்லது அல்ல என கொஞ்ச நாளுக்கு முன் பதிவு செய்யபட்ட ஒரு ஆர்டிக்கள். பரோட்டாவது நமது பாரம்பரய உண்வு அல்ல, மற்றும் அதை இளைஞ்ர்கள் தான் உண்ணுவார்கள், ஆனால் இப்பொழுது நமது ஒரு வயது குழந்தை முதல் 80 வயது வயாதனவர்கள் வரை உண்பது "இட்லி" எனப்படும் ஒரு தமிழனின் உணவு. இது போக பேஷன்ட்களும், அறுவை சிகிச்சை செய்தவர்களும் மற்றும் திட உணவு சாப்பிட ஆரம்பிக்கும் எந்த ஒரு பேஷன்டுக்கும் பரிந்துரைக்கும் முதல் உணவு இட்லி எனப்படும் வேகவைத்த "ரைஸ் பேன்கேக்".

இட்லியை நீங்கள் வீட்டில் மாவரைத்து சாப்பிட்டால் பிரச்சினை கொஞ்சமும் இல்லை இதயே கடையில் வாங்கி சாப்பிட்டால் பல பேருக்கு ஒத்து வராது என்பது மறுக்க முடியாத உண்மை. அப்ப என்னத்தான் பிரச்சினை என்கிறேர்களா, அதற்க்கும் தேவையான் மாவு பற்றி தான் இந்த ஆய்வு கட்டுரை.

ஆம் ஒரு காலத்தில் நாம் ஆட்டுரலில் மாவு அரைத்தோம், பின்பு அது மிக்ஸி மற்றும் எலக்ட்ரானிக் கிரன்டர்ஸ் வந்தது. அதுவும் பரவாயில்லை வாழ்க்கை மாற்றங்களின் காரணத்தால் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகிபோனது. ச்மீபமாக ஒரு முக்கிய திருப்பு முனையாக இட்லி தோசை மாவு ரெடியாக இப்பொழுது பட்டி தொட்டி, அண்ணாச்சி கடை முதல் பெரிய சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கிறது. மக்களும் இட்லி மாவு அரைப்பதையே மெல்ல மறந்து வருகின்றனர். முன்பாவது திடீர் டிபன் ரவா உப்புமாதான் இப்ப்பொழுது நம்ம வாண்டுகளிடம் " தம்பி ஒடி போய் ஒரு பாக்கெட் இட்லி தோசை மாவு தெருமுனை கடையில வாங்கி வா" அப்ப்டின்னு சொல்லி வந்த மாவை இட்லி தோசை ஊத்தி மிச்சத்தை ஃபிரிஜ்ஜில் வைத்து அது முடியும் வரை போகும். இது பேச்சலர்ஸ் கூட இப்ப செய்கின்றனர். இந்த மாவு ஒரு உயிர்கொல்லி - ஸ்லோ பாய்ஸ்ன் என்பது ஏனோ நிறைய பேருக்கு தெரிவதில்லை. இதன் பயங்கரத்தை இப்பொழுது கூறுகிறேன் கேளுங்கள் விழிப்புனர்ச்சியை பரப்புங்கள்.

1. நீங்கள் வாங்கும் எந்த ஒரு வெட் ஃப்ளோர்-Wet Flour (ஈர பத தோசை மாவிற்க்கு) ஐ எஸ் ஐ-ISI சான்றிதல் கிடையாது. அதனால் இது எந்த ஒரு ஆராய்ச்சி கூடத்திலும் சோதனை செய்யபடவில்லை.

2. இந்த மாவு சில மட்ட்மான அரிசியும் உளுந்தும் முக்கியமாக மாவுக்கு முன் காலத்தில் புண்ணுக்கு பயன்படும் போரிங் பவுடர் மற்றூம் ஆரோட் மாவு போடுவதால் மாவு பூளிப்பு வாசைனை கன்டிப்பாக வராது. அது போக மாவும் பொங்கி நிறைய வரும் என்பதால் இதை செய்கின்றனர்.  இதே மாதிரி வீட்டில் அரைத்த மாவை ரெண்டு நாள் வைத்து மூனாவது நாள் முகர்ந்து பாருங்கள் புளிப்பு வாசைனையும் வரும் தோசையும் புளிக்கும். ஏன் என்றால் மாவு பக்குவமாவதும் தயிர் உறைவது ஒரு நல்ல பேக்டீரியாவின் செயலாகும். இதை தவிர்க்க தான் க்டையில் வாங்கும் மாவுக்கு 6 நாள் கியாரன்டி அளித்தும் ஒரு வாசனை வராமல் இருக்க காரணம் இந்த் புண்ணிர்க்கு, கேர்ம்போர்டில் Boring Powder போடும் ஆரோட் மாவுதான்.

3. முக்கியமாக இந்த கிரைண்டர்  கமர்ஷியல் ரகம் இல்லை. அதாவ்து ஒரு நாளைக்கு 3 - 6 மணி நேரம் அரைக்க முடியும். ஆனால் இவர்கள் 12- 18 மணி நேரம் தொடர்ந்து ஓட்டுவதால் அந்த கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்மானம் ஏற்பட்டு பல சமயம் இந்த சிறு கருங்கள் துகள்களால் தான் சமீபமாக நிறைய பேருக்கு சிறு நீரகத்தில் கல் உண்டாகிறது. ஒரு நல்ல கல்லின் ஆயுள் 12 மணி நேரம் அரைத்தல் வெறும் 6 மாதம் தான். கொத்தி போட்டாலும் அடுத்த மூனு மாதம் தான் மேக்ஸிமம்.

4. உங்களுக்கு நன்கு தெரியும் சமையல் செய்யும் ஆட்கள் கை அடிக்கடி அலம்ப வேன்டும் மற்றூம் நகங்கள் வளர்க்கவே கூடாது. ஆனால் இந்த மாதிரி எந்த ஒரு சுத்ததையும் இவர்கள் பேனுவதில்லை. ஒவ்வொரு நகத்தின் இடுக்கிலும் உள்ள கிருமிகள் இந்த மாவில்கெட்ட பேக்டிரியாக்கள் மற்றூம் கிருமிகள்  ஈஸியாக சேர்ந்து உங்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைந்து மற்றும் வாந்தி பேதி அடிக்கடி உடம்பு முடியாமல் போவதற்க்கு இது தான் காரணம்.

5. கிரைண்டரை எனக்கு தெரிந்து தாய்மார்கள் பயன்படுத்த தயக்க்ம் இரண்டு விஷயங்கள். 1. கிரைண்டரை சுத்தம் செய்யும் கஷ்டம் 2. கல்லை துக்கி போட வேண்டும் ஒவ்வொரு முறை, பெரிய குடும்பமென்றால் இது சாத்தியம் சிறு குடும்பம் அதனாலயே கடையில் மாவு வாங்குகிரது. ஆனால் இவர்கள் கிரையன்டரை ஒவ்வொரு மாவு முடிந்தும் கழுவுவதில்லை அதனால் அந்த கிரயன்டரின் கிருமி அதிகரித்து கொண்டே செல்கிறது. இவர்கள் கமர்ஷியலாக பயன்படுத்த ஒவ்வொரு முறையும் வென்னீர் (Hot Water) உற்றி தான் சுத்தம் செய்ய வேண்டும் ஆனால் இவர்கள் ஒரு வாரத்திர்க்கு ஒரு முறை கழுவினாலே அதிகம், மாவு பொருட்களினால் எலிகள் மற்றும் பூச்சிகள் அந்த மிச்ச மாவை ருசித்து அந்த மிஷினின் சுத்ததன்மை போய்விடும்.

6. என்னதான் நல்ல அரிசி உளுந்து போட்டாலும் நல்ல தண்ணீர் தான் ஊற்றீ மாவு அரைக்க வேண்டும். இவர்கள் எந்த தண்ணீரை உபயோகப்டுத்துகின்றனர் என்பது கடவுளுக்கு கூட தெரியாது. எனெக்கு தெரிந்த தகவல் படி இவர்கள் போரிங் தண்ணீர் மற்றும் உப்பு தண்ணிரை ஊற்றும் காரணம் உப்பு போட வேண்டிய வேலை இல்லை.

7. அந்த கால ஃபார்முலா படி நம் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும் போது ஒரு கை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள். வெந்தயம் ஒரு இயற்க்கை ஆன்டி பயாடிக், உடம்பு உஷ்னம், வாய் நாற்ற்ம், அல்சர்க்கு இது ஒரு நல்ல பொருள் ஆனால் இவர்கள் யாரும் வெந்தயத்தை உபயோகிப்பதில்லை.

8. கிரையன்டரில் மாவு தள்ளிவிடும் அந்த ஃபைபர் பிளாஸ்டிக்கை ஆறு மாதத்திற்க்கு அல்லது வருடத்திற்க்கு ஒரு முறை மாற்ற வேன்டும் ஆனால் இவர்கள் அதை மாற்றவே மாட்டார்கள் அதனால் அந்த பிளாஸ்டிக் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து அதுவும் இந்த மாவில்தான்.

9. கிரையன்ட்ர் ஒட அந்த மத்திய குழவியை இனைக்கும் ஒரு செயின் அந்த செயினை இவர்கள் கழட்டி ஒரு கார்பன்டம் பெல்ட்டை மாட்டி இருப்பர்கள் ஒன்று சத்தம் வராமல் இருபதற்க்கும் மற்றூம் மாவு கை தள்ளி விடாமல் அரையும் டெக்னிக்குககாக. அந்த பெல்ட் தண்ணீர் பட்டு பட்டு அந்த பெல்ட் துகள்களும் நமது மாவில்தான்.

10.இந்த மாவை இவர்கள் அரைத்து கடைக்கு பிளாஸ்டிக் பேக் மூலம் சப்ளை செய்கின்றனர். நமது தமிழ் நாட்டு கிளைமேட்படி இதை ஃப்ரீஜரில் தான் வைக்க வேண்டும் அப்பொழுது தன் இந்த மாவில் பாக்டீரியாவின் உற்பத்தியை கட்டுபடுத்த முடியும், ஆனால் நம்மூர் பாதி கடைகளில் ஃப்ரிட்ஜில் தான் இதை வைத்து இப்ப இருக்கிற கரென்டு கட் பிரச்சனையில் இந்த மாவு கண்டிப்பாக பாய்ஸ்னாகிறது.