Saturday, January 22, 2022

வாழ்க்கை

 நாம் இருக்கும்

நிலைமையில்

இது தேவையா?

என்றெண்ணி....


நமக்கான

சந்தோஷங்களை

இழந்ததுதான் அதிகம்....


எல்லாம் கடந்து போகும் என்கிற

 நம்பிக்கையிலும்,


எல்லாம் மாறிப் போகும் என்கிற

 நிதர்சனத்திலும்,


எல்லாம் பழகிப் போகும் என்கிற

 எதார்த்தத்திலும்,


எல்லாம் நன்மைக்கே என்கிற 

மனப் பக்குவத்திலும்


கடந்து செல்கின்றேன் இந்த 

வாழ்க்கையை......


வாழ்வின் உன்னதம் அறிந்து மகிழ்ச்சியை தவறவிடகூடாது


 கிடைக்கும் போதே இந்த வாழ்க்கையை வாழ்ந்து விடுதல்

நலம்...