Friday, December 23, 2011

கணணியில் பணிபுரிபவர்களின் கவனத்திற்கு

கணணியில் பணிபுரிபவர்களின் கவனத்திற்கு
--------------------------------------------------
பெரும்பாலான அலுவலகங்களில் பணி நேரம் முழுக்க ஒரு நாற்காலியிலேயே கட்டுண்டு கிடக்க வேண்டியதாகி விடுகிறது.

இதனால் தேவையான உடல் உழைப்பு இல்லாமல் போவதால் டென்ஷன், முதுகு வலி, அஜீரண கோளாறு என்று வரிசை கட்டும் பிரச்சினைகள் ஏராளம். இவற்றைச் சரிசெய்து கொள்ள கடைபிடிக்க வேண்டியவைகள்:

1. காலையில் அலுவலகத்துக்கு வந்து உங்கள் இடத்தில் அமர்ந்ததும், வேலையைத் தொடங்குவதற்கு முன் ஒரு நிமிடம் கண்களை மூடி அமர்ந்து மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு வேலையைத் தொடங்கினால் சுறுசுறுப்பாக உணர்வதுடன் உங்களின் காலை நேரப் பதற்றமும் குறையும்.

2. நீங்கள் உபயோகிக்கும் நாற்காலி உங்கள் உடல் வெப்பத்தை வெளியேற்றும் வகையில் துளைகள் உள்ளதாக இருக்க வேண்டும். அவ்வாறு துளைகள் இல்லாத நாற்காலிகளைப் பயன்படுத்தினால் ஒரு துண்டை நான்காக மடித்துப் போட்டு அதன் மீது அமருங்கள்.

சில மணி நேரங்களில் உங்கள் உடலின் வெப்பம் அதில் இறங்கிய பின் அதன் மடிப்பை மாற்றிப் போட்டு அமருங்கள்.

3. முதுகை வளைத்து கூன் போட்டு உட்காராமல், நன்கு நிமிர்ந்து நாற்காலியில் முதுகு படும்படி உட்காருங்கள். கால்களை தரையில் வைப்பதைவிட சற்று உயரமான ஒரு சப்போர்ட் கொடுத்து வைத்துக் கொண்டால் முதுகுவலி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

4. பல மணி நேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால் தசைப்பிடிப்பு ஏற்படும். எனவே அவ்வப்போது கை, கால்களை நீட்டி மடக்குவது, தலையை நாலாபுறங்களிலும் சாய்த்துக் கொள்வது போன்ற செயல்களைச் செய்யுங்கள்.

கூடவே தண்ணீர் குடிப்பது, முகத்தைக் கழுவுவது, அருகில் சிறிது தூரம் நடந்து விட்டு வருவது என்று ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை உடலுக்கு ஏதாவது இயக்கம் கொடுங்கள்.

தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லை என்றால் குனிந்து கைகளால் பாதத்தை தொடுவது, இடுப்பில் கை வைத்துக் கொண்டு பின்புறம் வளைவது, இடது மற்றும் வலது புறம் சாய்வது போன்ற எளிமையான பயிற்சிகளை சில நிமிடங்கள் செய்யுங்கள். இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். தசைப் பிடிப்பும் விலகும்.

5. கணணி முன் வேலை செய்யும் போது எப்போதும் ஸ்கிரீனையே பார்த்துக் கொண்டிருப்பதால் தான் கண்களில் எரிச்சல் ஏற்படும். இதைத் தவிர்க்க அலர்ச்சியாகத் தோன்றும் போதெல்லாம் சில விநாடிகள் கண்களை மூடி அந்தக் கையின் மேல் மற்றொரு கையையும் வைத்து முடிக் கொள்ளுங்கள்.

இதனால் கண்களுக்கு சில நொடிகள் அடர்ந்த இருட்டுக் கிடைக்கும். இது அதிக ஒளியினால் ஏற்படும் சோர்வை விலக்கும். தவிர கண்களை மேலும் கீழுமாக, முன்னும் பின்னுமாக சுழற்றுகிற எளிமையான பயிற்சிகளையும் செய்யலாம். "ஆன்ட்டி ரேடியேஷன் கிளாஸ்" ஐ கணணித் திரையில் பொருத்துவதும் ஒளியினால் கண்கள் எரிச்சலடைவதைத் தடுக்கும்.

6. உடல் உழைப்புக் குறைவாக இருப்பதால் மாலை நேர சிற்றுண்டிக்கு எண்ணெய் பதார்த்தங்களைத் தவிர்ப்பது அஜீரணக் கோளாறுகளைத் தடுக்கும். அதற்கு பதில் அவல், அவல் புட்டு, பிரெட் சாண்ட்விச், பழக்கலவை, சுண்டல், சன்னா மசாலா, முளை கட்டிய பயிறு, பொரி, மசாலா பொரி, வேர்க்கடலை, பட்டாணி போன்றவற்றை சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாவதுடன் அதில் உள்ள வைட்டமின்கள் உடலுக்கும் அதிக சக்தி கொடுக்கும்.

7. இரவு வெகு நேரம் தூங்காமல் கண் விழித்து வேலை செய்வதாலும் அஜீரணக் கோளாறு ஏற்படும். இதனால் மறுநாள் காலை மலம் கழிக்க முடியாமல் சிரமப்படுவார்கள். இதைத் தவிர்க்க மாலை நேரத்தில் நாட்டு சர்க்கரை சேர்த்த அவல் அல்லது காய்ந்த திராட்சை அல்லது பப்பாளிப்பழம் சாப்பிடலாம்.

கூடவே நிறைய தண்ணீரும் குடிக்க வேண்டும். இதனால் அஜீரண கோளாறுகள் வெகுவாகக் குறைவதுடன் உடலின் வெப்பநிலையும் சீராக இருக்கும்.

Thursday, December 15, 2011

முல்லை ஆறு பெரியாறு அணை

மறக்கப்பட்ட மாமனிதர் கார்னல் ஜான் பென்னிகுக்..


இந்திய வரலாற்றில் இரக்கமற்ற படுகொலைக்கு பெயர் போன ஜாலியன்வாலாபாக் படுகொலையை அறங்கேற்றிய ஜெனரல் டயர் என்ற ஆங்கிலேயனை அனைவருக்கும் தெரியும்...
ஆனால் தன் சொத்துக்களை  விற்று ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய கர்னல் பென்னிகுக் பெயர்.. இந்தியாவில் யாருக்கும் தெரியாது...முக்கியமாக தமிழகத்தில் பல பேருக்கு தெரிய வாய்ப்பில்லை...




இந்திய சுதந்திர போராட்டத்தில் முதன் முதலில் 1700 களில் வேலூரில் தோன்றிய முதல் புரட்சி வரலாற்று பக்கங்களில் மறைக்கபட்டது.. காரணம் அது தமிழ்நாட்டில் நடந்தது என்ற ஒரே காரணம்தான்..அதுவே பஞ்சாப்பில் நடந்து இருந்தால் அது இந்திய வரலாற்றில் முதல் பக்கத்தில் இடம் பிடித்து இருக்கும்..இன்று போல அன்று தொலைத்தொடர்பு இல்லை என்பதால், அந்த 17ம்நூற்றாண்டில் ஆங்கில அரசுக்கு எதிரான வேலூரில் நடந்த புரட்சி, நீருபூத்த நெருப்பாக இருந்து 1858ல் சிப்பாய்கலகமாக மாறியது என்பதே வரலாறு....


பென்னிகுக் யார் என்று  தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் கேட்டு பாருங்கள்... யாருக்கும் தெரியாது...எனக்கே அவரை பற்றிய எந்த செய்தியும் தெரியாது....எஸ்ராமகிருஷ்ணனின் துணையெழுத்து படித்துக்கொண்டு இருந்த போது, இந்த பென்னிகுக் பெயரை பார்த்ததும் ,அவரை பற்றி முழு விபரமும் அறிந்ததும் அன்றுதான்...இதுதான் தமிழகத்தின் தலை எழுத்து...தமிழகத்தின் சாபம் என்று சுட சொல்லலாம்....


துணையெழுத்து புத்தகத்தில் நீரில் மிதக்கும் நினைவுகள் என்ற கட்டுரையை எப்போது வாசித்தாலும் என் கண்கள் ஈரமாகிவிடுகின்றது.. ஒரு நெகிழ்ச்சியான ,வீரமான,அதிகமான ஆட்டிடுயூட்  உள்ள மனிதர்களாகத்தான் லோகன்துரையையும் பென்னிகுக்கையும் நான் பார்க்கின்றேன்..

முல்லை பெரியாறு அணைக்காரனமாக பாசனவசதி பெரும் ஐந்து மாவட்டங்களான
தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்ட்மக்கள் இன்றும் பென்னிகுக்கை கொண்டாடி வருகின்றார்கள்..வீட்டில் அப்பா அம்மா இறந்து போனால் அந்த படத்தை எப்படி வைத்து பூஜிப்போமே அது போல அப்பகுதிமக்கள் பென்னிகுக்கிற்கு மரியாதை செய்கின்றார்கள்..அவர் பயெரில் உணவு விடுதிகள் இருக்கின்றன..கடவுள் சிலைபோல அவரையும் வழிபடுகின்றார்கள்..இது இந்தியாவில் ஆட்சி புரிந்த எந்த வெள்ளைக்காரனுக்கும் கிடைக்காத பேரு....

அவர் மேல்  உள்ள அளப்பறியா அன்பு காரணமாக தங்கள் பிள்ளைகளுக்கு அவரின் பெயரையும் லோகன்துரை பெயரையும் வைத்து நன்றி விசுவாசத்தை இன்னமும் செலுத்திவருகின்றார்கள்..

ஆனால் மதுரைக்கு இந்த பக்கம் வடதமிழ்நாட்டில் அவரை பற்றி யாருக்காவது தெரியுமா? என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்...இவ்வளவு ஏன்..தமிழ்நாட்டில்  எத்தனையோ என்ஜினியரிங் கல்லூரிகள் இருக்கின்றன.. அங்கு படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு முல்லை பெரியாறு அணை எப்படி கட்டினார்கள்.. அதன் அகலம் நீளம் என்ன?? எப்படி அந்த காலத்தில் கட்டினார்கள்..இப்போது அந்த அணையை எப்படி பலப்படுத்தினார்கள்//அது என்ன மாதிரி கண்ஸ்ட்க்ஷ்ன் என்பதை எதாவது ஒரு இன்ஜினியரிங் கல்லூரி மாணவனை கேட்டு பாருங்கள்.. எவனுக்கும் தெரியாது என்பதுதான் நிதர்சன உண்மை.


தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்டங்களில் விளையும், அரிசியும், காய்கனிகளும் ஐந்து மாவட்ட மக்கள் மட்டுமா? உண்டு பசி தீர்க்கின்றார்கள்.. ?? சென்னை கோயம்பேடு மார்க்கெட் மண்டி வரை அந்த ஐந்து மாவட்டத்தில் விளைந்த விளைபொருட்களைதான் நாமும் உண்ணுகின்றோம்...இவ்வளவு ஏன் அணையை உடைப்போம் என்று சொல்லும் கேரள சேட்டன்களுக்கும் நாம் விளைவிக்கும் உணவு பொருட்களை பெறுகின்றாகள்..


பென்னிகுக் நினைத்து இருந்தால்  நாள் முழுவதும் குடித்து விட்டு  சீட்டாடி இருந்து இருக்கலாம்.. நல்ல அழகான தமிழ் பெண்களை அனுபவித்து இருக்கலாம். கோடை விடுமுறையில் ஊட்டியில் பொழுதை கழித்து இருக்கலாம். அவர் செய்யவிவ்லலை... அன்று 18ஆம் நுற்றாண்டில் படுத்தி எடுத்த பஞ்சமும் அதன் பால் பாதிக்கபட்ட மக்கள் மட்டுமே அவர் கண்ணுக்கு தெரிந்தார்கள்..

1800 களில் இருந்தே பெரியாற்றின் குறுக்கே அணைகட்டி அதனை தமிழக பக்கம் திருப்பி விட பலர் முற்சித்து  தோல்வியில் போய் முடிந்தாலும்,அன்றைய தமிழ்நாட்டின் பஞ்சத்தை போக்க இது மட்டுமே சிறந்த வழி  நிரந்தர வழி என்று முடிவு எடுத்த பென்னிகுக், ஆங்கிலேய அரசிடம் அனுமதி வாங்குகின்றார்...

18ம் நூற்றாண்டின் இறுதியில் முல்லை ஆறு, பெரியாறு இரண்டும் சேரும் மலைக்காட்டுப்பகுதியில் ஒரு அணைகட்டுவது என்பது  சாதாரணகாரியமா??? சற்றே உங்கள் கற்பனை எண்ணிப்பாருங்கள்..இங்கிலாந்தில் இருந்து அப்போதைய நவீன இயந்திரங்களை இறக்கி அதனை மலைமேல் ஏற்றி 18 டன் சுண்ணாம்பு மற்றும் கற்களோடு இந்த அணை கட்டி முடிக்கபட்டாலும் பென்னிகுக் சந்தித்த பிரச்சனைகள் சொல்லி மாளாது...

அணைகட்டிக்கொண்டு இருக்கும் போதே காட்டாற்று வெள்ளம் அணையை அடித்துக்கொண்டு சென்று விட.. மேற்க்கொண்டு பணம் கொடுக்க முடியாது என்று ஆங்கிலேய அரசு கைவிரிக்க, பென்னி இங்கிலாந்து சென்று தன் சொத்துக்களையும் மனைவி  சொத்துக்களை எல்லாம் விற்று, ஒரு லட்சம்ரூபாய் பணம் கொண்டு வந்து ,காட்டு மிருகங்களின் தாக்குதல்,காலரா,வயற்றுப்போக்கு, விஷக்காய்சல், என அணைகட்டும் போது நடந்த விபத்துகள் என்று ,உயிர் விட்டவர்கள் ...ஒருவர் அல்ல இரண்டு பேர் அல்ல தமிழக மகாஜனங்களே 422  பேர் உயிரை கொடுத்து கட்டிய அணை அது...பலரது உடல்கள் மலையில் இருந்து கீழே எடுத்து வரமுடியாத காரணத்தால் மலையிலேயே புதைத்து விட்டார்கள்...அந்த சமாதிகள் இன்றும் வழக்கம் போல கவனிப்பாரற்று கிடைக்கின்றன...


தென் மாவட்டத்தின் பஞ்சம் போக்கிய வள்ளல் அவன்... அதனால்தான் அவன் மொழி இனம் கடந்து இன்றும் சிலைகளாகவும் பெயர்களாகவும், பேருந்தின் பின்புறம் பெரிய பெரிய உருவங்களாகவும் இன்னமும் நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கின்றான்..

ரஜினி,கமல்,விஜய்,சூர்யா போன்ற நடிகர்களை கொண்டாடும் அளவுக்கு கூட இங்கு பென்னிகுக்கை நாம் கொண்டாடுவது இல்லை..அவனுக்கு என்ன தலையெழுத்து அவன் சொத்தை விற்று இங்கு அணை கட்டவேண்டும் என்று கட்டாயம் என்ன?,

அன்றைய மதிப்பீட்டில் ஒரு லட்சரூபாய் இன்று அதே சொத்தின் மதிப்பு ஆயிரம் கோடி....அதை தமிழக மக்களுக்கு தாரைவார்த்த வள்ளல் அவன்..

வரலாற்று பக்கங்களில் டல்ஹௌசி பிரபு,டயர்,மவுன்பேட்டன், வாரன்ஹோஸ்ட்டிங் என்று பல பிரபுக்களை படித்து இருக்கின்றோம்..ஆனால் உண்மையான பிரபு பென்னிகுக் பற்றி இதுவரை தமிழகத்தை ஆட்சி செய்த யாரும் வரலாற்றில் பதிக்கவேயில்லை...வளரும் தலைமுறை யாருக்கும் வடமாவட்டத்தில் இருக்கும் எந்த பிள்ளைகளுக்கும் அவரை பற்றி தெரியாது அவர் தியாகம் தெரியாது.. மதுரையிலும் தேனியிலும் சிலை வைத்து விட்டால் போதும் என்ற நினைத்து விட்டர்கள் போலும்..

இவ்வளவு ஏன் எ பிலிம் பை பாராதிராஜா என்று பேசும் பாராதிராஜா கூட அவரின் எந்த படத்திலும் ஒரு கதாபாத்திரத்தின் பெயராக  கூட பென்னிகுக் பெயரை பதிவு செய்யவில்லை...அவர் நினைத்து இருந்தால் பென்னிகுக் பாத்திரத்தை இன்னும் சிறப்பாக தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்க முடியும்...நாடோடி தென்றல் படத்தில் பென்னிகுக் பற்றி சொல்லி இருக்கலாம்.. சொல்லாதது தப்பு இல்லை..ஆனால் பென்னிகுக் தியாகத்தினால் பலன் பெற்ற மாவட்டத்துக்காரர்.. அதனால் அந்த எதிர்பார்ப்பு......

வெகுநாட்களுக்கு பின்  நேற்று ஒரு சினிமா விளம்பரத்தில் வள்ளல் பென்னிகுக் ஆசியுடன் ஒண்டிப்புலி என்று ஒரு திரைப்படத்தின் தொடக்க விழா அறிவிப்பு என் கவனத்தை கவர்ந்தது..டெக்னிஷீயன்கள் பெயரை பார்த்தால் அதில் நண்பர் விஜய் ஆம்ஸ்ட்ராங் கேமரா மேனாக பணிபுரிகின்றார்.. அவருக்கு எனது வாழ்த்தை தெரிவித்தேன்...முதல் முறையாக தமிழ்சினிமா ஊடகத்தில் பென்னிகுக் பெயர் இடம் பெற்று இருக்கின்றது..அதுவே பெரிய சந்தோஷம்..பென்னிகுக்கால் பலன் பெற்ற தேனி மாவட்டத்துக்காரர் இயக்குனர் இமயம் பாரதிராஜா செய்யாத விஷயத்தை செய்த திரைப்படகுழுவுக்கு எனது  நன்றிகள்...


பென்னிகுக் பற்றி நிறைய தேடி தேடி படிக்கின்றேன்..அவரை பற்றி இன்னும் சிலாகித்து சொல்ல வேண்டும் என்றால் அவர் அணைக்கட்ட தேர்ந்து எடுத்த இடத்த்தை இன்றளவும் பொறியாளர்கள் புகழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.... என்னால் அவரை பற்றி சினிமா எடுக்க முடியாவிட்டாலும், பென்னிகுக் பற்றிய ஒரு ஆவணப்படம் இயக்கி அது தமிழக மக்கள் அனைவருக்கும் அந்த தியாக செம்மலின் வரலாற்றை வளரும் இளைய சமுதாயத்திடம் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கின்றது..உடல் உழைப்பை தர நான்தயார்..பொருளுதவி கிடைத்தால் வெகுவிரைவில் இந்த ஆவணபட வேலைகளை ஆரம்பிக்க இருக்கின்றேன்...


பென்னிகுக் யார் என்று கேட்டால் அவரை பற்றி நெகிழ்ச்சியாக பேசவேண்டும்...அவரின் உழைப்பையும் தியாகத்தையும் தமிழகத்தில் இருக்கும் அனைவரும் போற்றவேண்டும்..அவரால் நேரடியாக பயண்பெரும் மாவட்டத்தினரும் மறைமுகமாக பயண்பெரும் மாவட்ட மக்களும் அவர் தியாகத்தை போற்ற வேண்டும்...

உபயம் கனகராஜ் என்று கோவில் டியூப்லைட்டில் வெளிச்சம்வராவண்ணம் பெயர் பொறித்துக்கொள்ளும் நம்மவர்கள் மத்தியில் தன் சொத்துகளை  விற்று தமிழகத்தின் பஞ்சம் போக்கிய ஒரு வெள்ளக்காரனை தமிழகத்தில் இருக்கும் அநேகம் பேருக்கு தெரியில்லை எனும் போது மனது வலிக்கின்றது...

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமனாதபுரம் மக்க்ள் மட்டுமே பென்னிகுக்கை கொணடாடி வருகின்றனர்..ஆனால் தமிழகம் முழுவதும் கொண்டாட வேண்டும்..அதுவே என் ஆசை..

இனியாவது வளரும் சமுதாயம் அவர் பற்றி தெரிந்துக்கொள்ள பாடபுத்தகங்களில் பென்னிகுக் வாழ்க்கையையும் அவர் தமிழ்நாட்டுக்கு செய்த நன்மைகளையும், உழைப்பையும் ,பொருள் உதவியையும் பாடபுத்தகத்தில் ஒரு பாடமாக வைக்க வேண்டும்.....


நான் நிறைய முறை சொன்னதுதான்... நல்லவனாக இருப்பது என்பது இந்தியாவைபொருத்தவரை முக்கியமாக தமிழகத்தை பொருத்தவரை தகுதிஇழப்பு... ஜெனரல் டயர் போல பென்னிகுக் இந்திய வரலாற்றில் இடம் பிடித்து இருக்கலாம்..ஆனால் பென்னி நல்லது செய்து விட்டார்... என்ன செய்வது...????இதுதான் உலகம்..

கேரளாவில் 40க்கு மேற்பட்ட ஆறுகள் வீணாக கடலில கலக்கின்றன...ஆனால் நாம் பயண்படுத்துவது ஒரே ஒரு ஆற்று நீரைதான்...அதுதான் சேட்டன்களின் கண்களை உறுத்துகின்றது..பாரத் மாதா கீ ஜெ...............

கண் எதிரில் அணையை உடைத்தே தீருவோம் என்று சூளுரைக்கும் சேட்டன்களை புத்தியை நினைத்து பார்த்து இருந்தால் இவ்வளவு உழைப்பையும் 422 பேர் உயிரையும் கொடுத்து, பென்னிகுக் அணையை அந்த இடத்தில் கட்டி இருக்கமாட்டார்....


உங்கள் குழந்தைகளுக்கு கதை சொல்லும் போது காக்கா,நரி கதைகளோடு பென்னிகுக் போன்ற தியாக கதைகளையும் சேர்த்து சொல்லுங்கள்..

பயண் துக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது...

(பயணை எதிர்பாராமல் ஒருவர் செய்த உதவியாகிய அன்புடைமையை ஆராய்ந்து பார்த்தால் அதன் நன்மை கடலினும் மிகப்பெரியதாகும்...)

தேனி, கம்பம், மக்கள்  கர்னல் பென்னிகுக் படத்தை வைத்து இருக்கின்றார்கள் அந்த படத்தின் கீழே இருக்கும் வாசகம் என்றும் வரலாற்றில் நீங்கா இடம் பிடிக்கும்.... அந்த வாசகம் கீழே...

நீர் இருக்கும் வரை நீர் இருப்பீர்.......

கார்னல் ஜான்பென்னிகுக்கின் தியாகம் கடலை விடமிகப்பெரியது..


நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....

Friday, December 02, 2011

நமது உடம்பை பற்றி (Body Working Time)

எத்தனை கோடி , கோடியாய் நாம சம்பாதிச்சாலும், நமது உடல் நலத்துடன் இல்லையென்றால் , சவலைப் புள்ளை மாதிரி, எல்லாவற்றையும் ஏக்கத்தோட பார்த்து , பார்த்து பேரு மூச்சு விட்டுக்கிட்டே இருக்க வேண்டியதுதான்...

நம்ம உடம்பை பற்றி , நாம தெரிந்து கொள்ள கீழே உள்ள தகவல்கள் நமக்கு உதவியா இருக்கும்.... இப்போ , நாம எப்படி வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்... எதை சரி பண்ணலாம்னு சோதனை பண்ணிக்கோங்க....

நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கு என்று  தனித்தனியே
கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவுசெய்து கொண்டு
சுழன்றுகொண்டிருக்கிறது.
ஒவ்வொரு உறுப்புக்கும் அதன்பணியை செய்து முடிக்க  இரண்டு மணிநேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும்
அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.

விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம்.
இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும்  பிராண சக்தியை  உடலுக்குள்அதிகமாகச் சேகரித்தால்ஆயுள் நீடிக்கும்.
தியானம் செய்யவும் ஏற்ற நேரம்இது.
ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.

விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம்.

காலைக்கடன்களை  இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும்
மலச்சிக்கல் உள்ளவர்கள்இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும்
பழக்கத்தைஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும்.
உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.

காலை 7.00 மணி முதல் 9.00 மணிவரை வயிற்றின் நேரம்.

இந்த நேரத்தில் கல்லைத்தின்றாலும் வயிறு அரைத்துவிடும்
காலை உணவை பேரரசன் போல் உண்ணவேண்டும் என்று சொல்வார்கள்
இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்குசெரிமானமாகி உடலில் ஒட்டும்.

காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம்.

காலையில் உண்டஉணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும்
ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர்கூடக்  குடிக்கக்கூடாது.மண்ணீரலின் செரிமானசக்தி பாதிக்கப்படும்
நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.

முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம்.

இந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல்,
அதிகமாகக் கோபப்படுதல்,அதிகமாகப் படபடத்தல்கூடாது
இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம்.

பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணிவரை சிறுகுடலின் நேரம்
இந்த நேரத்தில்மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே  ஓய்வெடுப்பது நல்லது.

பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம்.
நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.

மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம்.
பகல் நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு  அமைதி பெற,
எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம்செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.

இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை,பெரிகார்டியத்தின் நேரம்.
பெரிகார்டியம்என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும்
 ஒரு ஜவ்வு இதயத்தின் Shock  absorber   இரவுஉணவுக்கு உகந்த நேரம் இது.

இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை,
டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல,
உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை
இணைக்கும்பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.

இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம்.
இந்த நேரத்தில்தூங்காது  விழித்திருந்தால்
 பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.

இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம்.

இந்தநேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது
கட்டாயம்படுத்திருக்க வேண்டும் உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை  கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது.
இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள்முழுவதும்
சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்.

Thursday, December 01, 2011

புதிய இந்தியா!(New India)


புதிய இந்தியா!

"levis jeans" ஸும்,"van heusen"ஸும்
வந்ததால் - எங்களின்
பருத்தி காதி துணிகள்
பழசாய்ப் போயின!

"நைட்டியும்","கவுனும்"
வந்ததால் - எங்களின்
தாவணிகளும்,புடவைகளும்
தரமிழந்துப் போயின!

"pizza" வும் "burger" ரும்
வந்ததால் - எங்களின்
இட்லி,சப்பாத்திக்களை
சுவை இழக்க வைத்தன!

"axe perfume" உம் "olay" க்களும்
வந்ததால் - எங்களின்
மஞ்சளும்,மருதாணிக்களும்
வாசம் இழந்துப் போயின!

"valentine's day, friendship day" க்களும்
வந்ததால் - எங்களின்
நட்புக்களும்,கல்யாணங்களும்
கோர்ட் படிகள் ஏறுகின்றன!

"cricket"டும்,"golf" பும்
வந்ததால் - எங்களின்
கபடியும்,மல்யுத்தமும்
களையிழந்துப் போயின!

"wine" னும்,"vodka" வும்
வந்ததால் - எங்களின்
கூழையும்,கள்ளையும்
குழித்தோண்டிப் புதைத்தன!

"standard charted,american express bank" கும்
வந்ததால் - எங்களின்
கூட்டுறவு வங்கிகள்
திவாலாகிப்போயின!

"dollar ,euro" க்களும்
வந்ததால் - எங்களின்
மூளைகள் வெளிநாடுகளில்
அடமானத்திற்க்கு விற்கப்பட்டன!

இதோ....
"walmart" டும்,"tesco" வும்
வருவதால் - எங்களின்,அண்ணாச்சி கடைகளும்
நாடார் அங்காடிகளும்,செட்டியார் வியாபாரங்களும்
உழைக்கும் விவசாயிகளும் கூட இனி...
அமெரிக்கர்களின் எகாதிபத்யத்தில்
மீண்டும் அடிமையாகப் போகிறார்கள்.

இருப்பதை விட்டுவிட்டு
பறப்பதற்கு ஆசைப்படும்
அரசியல் அதிகாரிகளுக்கு
மீனைவிட தூண்டில் பெரிதென்று
புரிவதெப்போது?