Saturday, December 28, 2013

ஏதாவது செய்யணும்

 ஏதோ பிறந்தோம்,
ஏதோ வாழ்ந்தோம்
என்றிருப்பதல்ல வாழ்க்கை!

எப்படி வாழ்ந்தோம் என்பதும் ஒரு அங்கம்.

வாழக் கிடைத்த வாழ்க்கையில்,
ஒரு சிலருக்காவது
வசந்தத்தின் முகவரியை
அறிமுகம் செய்தோமேயானால்
அதுவே நமக்கு
வசீகரத்தின் வனப்பைக் கூட்டும்!

 எங்கே நமக்கு நிம்மதி கிடைக்கிறதோ,
அதுவே நமக்கு சொர்க்கம்
அதனால் நமது வாய்ப்புகளை
நாமே
தீயிட்டு அழித்து கொள்ள கூடாது