Saturday, October 29, 2011

நல்ல நண்பன் யார்?

தீய பழக்கங்களுக்கு அடிமையாக்குதல்
"புகைப் பிடிக்கவில்லை என்றால் நீ ஒரு ஆம்பிளையே இல்லை"
என்று உசுப்பேற்றும் நண்பர்கள் ஏராளம்.
நட்பை மதிப்பவனாயிருந்தால், ஒழுங்கா புகைப்பிடி என்று அன்பான எச்சரிக்கை கொடுத்து பலரை புகைக்கு அடிமையாக்குபவர்களும் ஏராளம்.
நண்பர்களின் மனம் கோணக்கூடாதே என்பதற்காக புகைப்பிடித்து, அதற்கு அடிமையாகி, தங்களின் ஆரோக்கியத்தை பலிகொடுத்தவர்கள் பலர்.

இதே போன்றுதான் மது பழக்கமும்.

"தண்ணியடிக்காதவனை எந்தப் பொண்ணும் ஆம்பிளை என்று மதிக்கமாட்டாள்" என்று அபத்தமாக சொல்லி, அதற்கு பழக்கிவிடும் நண்பர்களும் அதிகம்.
பலர், பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின்போதே, புகை மற்றும் போதைக்கு அடிமையாகி விடுகின்றனர்.
எனவே பள்ளி சான்றிதழ் மற்றும் கல்லூரி பட்டங்களுடன், பல கெட்டப் பழக்கங்களையும் தீய நண்பர்களின் மூலம் நாம் உள்வாங்கிக் கொள்கிறோம்.
புகை மற்றும் மதுப் பழக்கம் மட்டுமின்றி, வேறு பல ஒழுக்கக்கேடான விஷயங்களிலும் நமது ஆர்வத்தைத் தூண்டி, ஏதாவது ஒரு பொருந்தாத காரணத்தை சொல்லி, நம்மை அந்த ஆபத்தில் ஈடுபட வைக்கிறார்கள்.
இதன் மூலம் நாம் நமது கவனத்தை இழப்பதோடு, உயிர்கொல்லி நோய்கள் உள்ளிட்ட சில ஆபத்துக்களுக்கும் ஆளாகிறோம்.
மேலும், ஒழுங்காக படித்து, ஆராய்ச்சி செய்யும் ஒரு மாணவனை கிண்டலடிப்பதோடு, வயசுப் பையன் அல்லது பெண் இவ்வாறு இருக்கக்கூடாது என்றும், வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்றும் கூறி மனதைத் திருப்புகின்றனர்.
ஆனால் அந்த சந்தோஷம் என்பது சில வருடங்களுக்குத்தான் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை.
இளமையில் முயற்சி செய்யாமல், தீய பழக்கங்களுக்கு அடிமையாகும் மாணவர்கள், தமது வாழ்நாள் முழுவதும் சீரழிவார்கள் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.
மேலும், பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு சவால்கள் அதிகம்.
எனவே, பெற்றோர்கள் இந்த விஷயத்தில் தொடர் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்.
நண்பர்கள் தங்களின் மகிழ்ச்சி மற்றும் சோகத்தைப் பகிர்ந்துகொள்ள, மதுவை ஒரு துணையாக்கிக் கொள்கின்றனர்.
 நல்ல நண்பன் யார்?
ஒரு நல்ல நண்பன், எப்போதுமே, தனது சக நண்பனின் முன்னேற்றம் மற்றும் நலன் சார்ந்த விஷயங்களிலேயே அக்கறையாக இருப்பான்.
தனது நண்பன் தீமைகளின் பக்கம் சென்றால்கூட, புத்திசொல்லி திருத்த முயற்சிப்பான்.
ஒருவேளை, தான் ஏதேனும் கெட்டப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தாலும்கூட, தன் நண்பன் அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகாதபடி தடுப்பான்.
அந்த நல்ல நண்பன் சீரிய சிந்தனைக்கும், அறிவு முன்னேற்றத்திற்கும், ஆக்கப்பூர்வ செயல்பாடுகளுக்கும் எப்போதும் துணை நிற்பான்.
அவனும் உயர்வதோடு, தன்னை சார்ந்தவன் உயரவும் அவன் காரணமாக இருப்பான்.

Thursday, October 20, 2011

Tips For Better Life


1. Take a 10-30 minutes walk every day. And while you walk, smile.
2. Sit in silence for at least 10 minutes each day.
3. Sleep for 7 hours.
4. Live with the 3 E's -- Energy, Enthusiasm, and Empathy.
5. Play more games.
6. Read more books than you did in 2007.
7. Make time to practice meditation, yoga, and prayer. They provide us with
daily fuel for our busy lives.
8. Spend time with people over the age of 70 & under the age of 6.
9. Dream more while you are awake.
10. Eat more foods that grow on trees and plants and eat less food that is
manufactured in plants.
11. Drink plenty of water.
12. Try to make at least three people smile each day.
13. Don't waste your precious energy on gossip.
14. Forget issues of the past. Don't remind your partner with his/her
mistakes of the past. That will ruin your present happiness.
15. Don't have negative thoughts or things you cannot control. Instead
invest your energy in the positive present moment.
16. Realize that life is a school and you are here to learn. Problems are
simply part of the curriculum that appear and fade away like algebra class
but the lessons you learn will last a lifetime.
17. Eat breakfast like a king, lunch like a prince and dinner like a beggar.
18. Smile and laugh more.
19. Life is too short to waste time hating anyone. Don't hate others.
20. Don't take yourself so seriously. No one else does.
21. You don't have to win every argument. Agree to disagree.
22. Make peace with your past so it won't spoil the present.
23. Don't compare your life to others'. You have no idea what their journey
is all about. Don't compare your partner with others.
24. No one is in charge of your happiness except you.
25. Forgive everyone for everything.
26.. What other people think of you is none of your business.
27. GOD ! heals everything.
28. However good or bad a situation is, it will change.
29. Your job won't take care of you when you are sick. Your friends will.
Stay in touch.
30. Get rid of anything that isn't useful, beautiful or joyful.
31. Envy is a waste of time. You already have all you need.
32. The best is yet to come.
33. No matter how you feel, get up, dress up and show up.
34. Do the right thing!
35. Call your family often.
36. Your inner most is always happy. So be happy.
37. Each day give something good to others.
38. Don't over do. Keep your limits.
39. When you awake alive in the morning, thank GOD for it.
40. Please Tell this to everyone you care about.

Tuesday, October 18, 2011

சிந்தனையில் கொள்ள வேண்டிய கருத்துக்கள்...

1. எப்போதும் பின் வரிசையில் ஒளியாதீர்கள். முன் வரிசைக்கு வாருங்கள்.

2. யாரைச் சந்தித்தாலும், தைரியமாக அவர்கள் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.

அவர் எப்பேர்ப்பட்ட பிரபலமாக இருந்தாலும், தலை கவிழ்ந்து தரையில் விரலால் கோலம் போடுவதெல்லாம் வேண்டாம்.

3. நீங்கள் நடக்கிற வேகத்தை அதிகப்படுத்துங்கள்.

நடையில் தெரியும் அந்த சுறுசுறுப்பு, உற்சாகம் உங்கள் செயல் வேகத்தையும் தானாக அதிகரிக்கும்.

4. எந்த கூட்டத்திலும் அடுத்தவர்கள் பேசட்டும் என்று காத்திருக்காதீர்கள். அங்கே கேட்கிற முதல் குரல் உங்களுடையதாகட்டும்.

5. எந்நேரமும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்திருங்கள். அது தருகிற தன்னம்பிக்கை வேறு எங்கேயும் கிடைக்காது.

Monday, October 17, 2011

Every woman is beautiful


A little boy asked his mother, " Why are you crying?" "Because... I'm a woman", she told him. " I don't understand", he said. His mum just hugged him and said, " And you never will"..

Later the little boy asked his father, " Why does mother seem to cry for no reason?" " All women cry for no reason" was all his dad could say.

The little boy grew up and became a man, still wondering why women cry.

Finally he put in a call to God; when God got on the phone, the man said, " God, why women cry so easily?"

God said, "When I made women she had to be special. I made her shoulders strong enough to carry the weight of the world; yet, gentle enough to give comfort.

I gave her an inner strength to endure childbirth and the rejection that many times come from her children.

I gave her a hardness that allows her to keep going when everyone else gives up and take care of her family through sickness and fatigue without complaining.

I gave her the sensitivity to love her children under any and all circumstances, even when her child has hurt them very badly.

This same sensitivity helps her make a child's boo hoo feel better and shares in their teenagers' anxieties and fears..

I gave her strength to carry her husband through his faults and fashioned her from his rib to protect his heart.

I gave her wisdom to know that a good husband never hurts his wife, but sometimes tests her strengths and her resolve to stand beside him unfalteringly.

And finally I gave her a tear to shed. This is hers exclusively to use whenever it is needed. The beauty of a woman is not in the clothes she wears, the figure that she carries, or the way she combs her hair. The beauty of a woman must be seen in her eyes, because that is the doorway to her heart, the place where love resides."

" Every woman is beautiful."


Friday, October 14, 2011

தன்னம்பிக்கை (Self Confidence)

200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி
” யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.

கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.

பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி
அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து
“இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள்.
அனைவரும் கையைத் தூக்கினர்.

அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி
“இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார்
அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.

அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும் மிதிப்பட்டும் அழுக்கடைந்தும்
அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும் ,
தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம் .
நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர்.

இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொர்ருத் தனித் தன்மை இருக்கும்.
அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்கை என்ற பயிர்க்கு
தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொள்ளிகளும்.
ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்க......................

Wednesday, October 12, 2011

நன்றும் இன்றே செய்

நன்றும் இன்றே செய் ! இன்றும் இன்னே செய் ! - நிச்சயமாக உங்கள் வாழ்க்கைக்கு மாபெரும் பொக்கிஷம் !

ஆலயம் என்றால் என்ன? ஏன் நாம அங்கே போகணும்? நம்ம மதத்தில மட்டும் ஏன் இத்தனை கடவுள்கள்? கடவுள் நிஜமாவே இருக்கிறாரா/ அப்படி இருந்தா, அவர் எங்கும் இருப்பவர்னா, அப்புறம் ஏன் கோவில்ல மட்டும் நாம போய் கும்பிடனும் ?  மத்த இடங்கள்...? இப்படி உங்களைப் போலவே பல கேள்விகள் எனக்கும் உண்டு.... பொறுமையா, ஒவ்வொரு விஷயமா பார்ப்போம்...!

இந்த கம்ப்யூட்டர் இருக்கு. அப்படினா இதை ஒருத்தர் உருவாக்கி இருக்கணும். இந்த மேஜை, நாற்காலி இருக்கு. இதை ஒரு தச்சர்தான் உருவாக்கி இருக்கணும். ஒரு பொருள் இருந்தா , அதுக்கு ஒரு காரணகர்த்தா உண்டு. அதே மாதிரி, இந்த பூமி, வானம், சூரியன், நட்சத்திரம், அண்டம், பேரண்டம் எல்லாம் இருந்தா , அதுக்கும் ஒரு காரண கர்த்தா இருக்கணும், இருந்தே ஆகணும்....

அப்படி உங்களையும் , என்னையும் இந்த உலகத்தையும் உருவாக்கிய பரம்பொருள் தான் , கடவுள்...! (அப்படின்னு நான் சொல்றேன். நீங்க உங்களுக்கு தோணுன பிறகு சொல்லுங்க போதும் . நாம எல்லாரும் கடவுளின் குழந்தைகள். இறை நம் அனைவரின் உள்ளும் நிறைஞ்சு இருக்கு. ஆபடிப்பட்ட நாமே , மனசு அறிஞ்சு ஏதாவது தப்பு செய்யலாமா? )

அப்போ அவர் எவ்வளவு  பெரிய மகா சக்தி...!  எப்படி இருந்தா, அவர் இத்தனையையும் கட்டிக் காக்க முடியும்..! நாம என்னடான்னாக்க , நம்ம வீட்டை , ஆபீஸை  கட்டுக் கோப்பா வைக்கிறதுக்குள்ளவே , முழி பிதுங்குறோம்...!

கடவுள் - இந்த உலகத்தை எப்படி சமாளிக்கிறார்னு பாருங்க... !

ஒவ்வொரு ஜீவ ராசிக்கும், அது ஜனிக்கிறப்போவே ஒரு சார்ட் , அதுதாங்க, ஜாதகம்...உண்டு. மனுஷனா இருக்கிறதால, நமக்கு சிந்திக்கிற அறிவு இருக்கிறதால  , ( நமக்கு எல்லாம் ஆறறிவாம்ல) , நம்ம முன்னோர்கள் இதுல எதோ விஷயம் இருக்குதுன்னு , கண்டு பிடிச்சு சொல்லி இருக்கிறாங்க... நாம தான் அதை பெரிசா எடுத்துக்கலை...

ஒவ்வொரு மனுஷனோட உடம்புலயும், ஒன்பது சக்கரம் சுழலுதாம். நாம பிறக்கும்போது, இந்த ஒன்பது கிரகங்கள் எங்கே , எங்கே இருக்குதோ, அதுக்கு ஏத்த படி இந்த சக்கரங்கள் நம்மை சுழட்டுவித்து - நீ இப்போ இதை செய், இதை செய்யாதேன்னு கொஞ்சம் , கொஞ்சமா ஆட்டுவிக்குது,,, நம் எண்ணங்கள் உள்பட... இதற்க்கு பஞ்ச பூதங்களால் ஆன நம் உடம்பு , இயற்கைக்கு கட்டுப் படுது.  சனி , செவ்வாய் , குரு இந்த மாதிரி கிரகங்கள் உண்டு தானே... கிரகணம் உட்பட...!

நீங்கள் இயற்கையிலிருந்து  , பஞ்ச பூதங்களில் இருந்து எதை எடுத்தாலும், இந்த நவ கோள்களின் பிடியில் வந்து விடுகிறீர்கள்.

பெரிய , பெரிய முனிவர்கள், ரிஷிகள் - உன்னை உணர் , உன்னை உணர்னு சொல்றது இதைத்தான்... இந்த சக்கரத்தை நாம உணர்ந்து - உள்ளுக்குள் உறைந்து கிடக்கும் அந்த சக்தியை , உபயோகப் படுத்துனு சொல்றாங்க... யோக, பிராணயாம பயிற்சிகள் சொல்லிக் கொடுக்கிறதும் இதைத்தான்.. !
இயற்கை , நவ கிரகங்கள் எல்லாம் வெளிப்படுத்துற சக்தியை , இந்த சக்கரங்கள் வாங்கி, நம்மளை செயல் பட வைக்குது... இது நல்ல வகையில் செயல் நடத்த , நமது பூர்வ ஜென்ம வினைகளைப் பொறுத்து அது அமைகிறது...!

ஜாதகம், வாஸ்து , அதிர்ஷ்ட்டக் கற்கள் எல்லாம் ஒரு பாதினு வைச்சாக் கூட, மீதி பாதி , உங்க கையில தான் இருக்குது..! போன ஜென்மத்து வினைகள் , கடுமையா இருந்தாக் கூட , தெளிவான மன திடத்துடன், சிந்தனையுடன், உங்கள் உடல்  நலம் பற்றிய அக்கறையுடன் , திட்டமிட்டு , முடிவு எடுத்தாலும், நீங்கள் வெற்றி பெற முடியும்.. ! என்ன , கடினமாக போராட வேண்டி வரும்..!

இதையே , போன ஜென்மத்து புண்ணியம் நிறைய வைத்து இருப்பவர்கள், உங்களில் கால்வாசி முயற்சி செய்தாலே , உங்களை தாண்டிப் போக முடியும்... ! அப்போ, நம்ம முயற்சிக்கு என்ன பலன்னு கேட்காதீங்க...! நடந்து  முடிந்த விஷயங்களைப் பற்றி , யோசித்து என்ன பண்ண முடியும்? இனிமேலாவது , நல்ல காரியங்களை செய்து , புண்ணியக் கணக்குல கொஞ்சம் வரவு  வைப்போம்... !  பாவக் கணக்கை இது தாண்டி வந்திடுச்சுனா, எப்போ வேணும்னானாலும், அது உங்களுக்கு பயன் தருமே !

அதனாலே , ஜாதகத்தைப் பார்த்துட்டு - எந்த ஜோதிடரும் , ஒன்னும் சரியா இல்லையேப்பா ன்னு சொன்னாக் கூட , மனம் தளர்ந்து போகாம , தைரியமா , முயற்சி செய்யுங்கள்.. இன்னும் ஒரு பாதி இருக்கு....

நடந்தவை போகட்டும். இனிமேல் நீங்கள் செய்யும் ஒவ்வொரு நற்காரியங்களும், புண்ணிய செயல்களும், தர்ம காரியங்களும் - உங்களுக்கு அடுத்த ஜென்மம் வரை கூட , துணை வரும். உங்கள் சந்ததியையும் காக்கும்.

இது எல்லா விஷயமும் , நம்ம முன்னோர்களுக்கும் தெரியும்.ஆனால், ஏதோ காரணங்களுக்காக , பல புராணக் கதைகளோட அதை மிக்ஸ் பண்ணி, மிகை படுத்தி , ஒரு கேலிக் கூத்தா, நம்பவே கொஞ்சம் கடினமா ஆக்கிட்டாங்க..!

கோவில்கள் எதற்கு தேவை?
சுதி, லயம் எல்லாம் சேர்ந்தாதான் , பாட்டு. அது மாதிரி,ஆண்டவனை , ஆள்பவனை , ஆளப் போகிறவனை சரியான விகிதத்தில் வைத்து இருக்கும் இடம் தான் ஆலயம். இப்படிப் பட்ட ஒரு ஆலயத்தில் நீங்கள் உள்ளே நுழையும்போதே , உங்கள் உடம்பில் சுணங்கிக் கொண்டு இருக்கும் சக்கரம் சீராக சுழல ஆரம்பிக்கும். உங்களுக்கும் தெளிவு கிடைக்கும் . நீங்களும் சுய, புத்தியுடன் செயல் பட ஆரம்பிப்பீர்கள்.

இப்படி , மிக சரியான விகிதத்தில் அமைந்து இருக்கும் ஆலயங்கள் இந்தியாவில் , ஏராளம். இந்த ஒரு விஷயத்தை நாம் புரிந்து இருப்பதைவிட, நம் எதிரி நாடுகள் தெளிவாகப் புரிந்து , பொறாமையில் புழுங்கிக் கொண்டு இருக்கின்றன. குறிப்பாக , நம் தென் இந்தியாவில் இப்படிப் பட்ட ஆலயங்கள்  அதிகம். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் , பாலை என ஐந்து இயற்கை நிலங்களும் இங்கு அதிகம். பாலை நிலமா ? கடற்கரை கூட பாலை தான்.

இப்படிப்பட்ட மகத்தான ஒரு பூமியில் தான் நாம் பிறந்து இருக்கிறோம். இல்லை , போன ஜென்மத்தில் பிறந்து இருப்போம்... இல்லைனா, நீங்கள் இப்போது எப்படி தமிழில் பேச, படிக்க முடியும்?

அந்த பரம்பொருளின் மகத்தான ஆசி பெற, ஐதீக முறைப்படி அமைந்த ஆலயங்கள்  இங்கு இருப்பதைப் போல , உலகில் வேறு எங்கும் கிடையாது. இன்றைக்கும், அயல் நாடுகளில் வசிக்கும் அன்பர்கள் நம் தமிழ் நாடு வந்தால்,  அது ஒரு கோவிலுக்குப் போக வேண்டும் என்கிற எண்ணத்தை உள்ளடக்கியே இருக்கும்.

நம் ஊரில் இருக்கும் நண்பர்களுக்குத்தான் இந்த ஆலயங்களின் மகிமை புரிவதே இல்லை. பக்கத்து வீட்டில் இருக்கும், பிற மதத்தவர்கள் வாரம் தவறாமல் , அவரவர் கடவுளை வணங்கினாலும் , நமக்கு பிரதோஷம், பௌர்ணமி கூட ஒரு பெரிய விஷயம் இல்லை.

இந்த மாதிரி விசேஷமான நேரங்களில், விசேஷமான ஆலயங்களில் நாம் இருந்தாலே போதும், நமக்கு நம் கர்ம வினைகளின் தாக்கம் குறைய ஆரம்பிக்கும்.

நம் மதத்தில் மட்டும் ஏன் இத்தனை கடவுள்கள்?

ஒரு வீடு என்று இருந்தால் , எப்படி ஹால் , பூஜையறை, சமையலறை , தூங்கும் அறை என்று இருக்கிறதோ, அதன் மூலம் குறிப்பிட்ட பலன்கள் நாம் அனுபவிக்கிறோமோ, அதைப் போல - ஒவ்வொரு தெய்வத்திற்கும் , சில குறிப்பிட்ட வரங்களை அளிக்கும் ஆற்றல் இருக்கிறது. இதனால் தான் , பலப் பல ஆலயங்கள் , பலப்பல தெய்வங்கள் நம் முன்னோர்களால் வழிபடப்பட்டு இருக்குமோ என்கிற எண்ணம் தலை  தூக்குகிறது.

சரி, மனிதனாகப்  பிறந்தவர்களுக்கு எந்த தெய்வத்தை வணங்கினால் நல்லது என்று பார்த்தோமேயானால் - மகத்தான ரிஷிகள் அனைவரும் அறிவுறுத்துவது - கால பைரவரையே.  இவர் தான் சனி பகவானின் குருவாக கருதப்படுபவர். கர்ம வினைகளை அறுப்பவர் இவரே. நாம் எத்தகைய கொடிய பாவங்களை முன் ஜென்மங்களில் செய்து இருந்தாலும், அவற்றின் தாக்கத்தை குறைத்து , நமக்கு கிடைக்கவேண்டிய பலன்களை அள்ளிக் கொடுப்பவர். சிவ சொரூபங்களில், விரைவில் பலன்களை  தருபவர் பைரவர்தான்.

பைரவரை வழிபட தேய்பிறை அஷ்டமி தினம் , மிக உகந்தது. வீட்டில் வைத்து பைரவரை வணங்க இயலாது. பைரவ மூர்த்தத்தில் - சொர்ண ஆகர்ஷண பைரவரை மட்டும் வீட்டில் வைத்து வணங்கலாம். இவரது படம் வீட்டில் இருந்தாலே போதும். உங்களுக்கு பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். முறைப்படி , வழிபடத் தொடங்கி , நம்பிக்கையுடன் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் , உங்களுக்கு மகத்தான வெற்றியை தேடித் தரும்.

விதிப்படி நடப்பதை நாம் தடுக்க முடியாது. உங்களுக்கு ஒரு இழப்பு, பிரிவு , துக்கம் ஏற்பட வேண்டுமெனில் , அது நடந்தே தீரும். அப்ப, இறைவனை வழிபடுவது எதற்கு என்று கேட்கிறீர்களா? இழப்பதை தடுக்க முடியாது தான், அது பூர்வ ஜென்ம வினை. ஆனால், இந்த தெய்வ வழிபாடு உங்களுக்கு வரவிருக்கும் வாய்ப்புகளை விரைவில் கொடுக்கும். உதாரணத்திற்கு , உங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பு இருக்கும் என்றால், ஏதோ ஒரு வகையில் , உங்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் வரவு வர வைக்கும். இப்போது, உங்களால் இழப்பை ஈடு செய்ய முடியும் அல்லவா?

ஒரு பெண்ணை மனதார விரும்புகிறீர்கள் , என்று வைத்துக் கொள்வோம். சந்தர்ப்ப சூழ்நிலையால் , அவரை மணம் முடிக்க இயலவில்லை. காதல் தோல்வியில் முடிகிறது. அது உங்கள் வினைப் பயன். மனம் தளராது , நீங்கள் இறைவனைப் பற்றி நிற்கும் பொழுது, அவர் உங்களுக்கு அந்த பெண்ணை விட , அற்புதமான வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பார். உங்கள் மனம் மகிழ்ந்து , ஏற்கனவே இருந்த வலி , துயரம் மறைந்துவிடும்.

அதை விட்டு , துயரம் வலி வந்தால்  - மதுவின் பிடியில் மாட்டிக்கொண்டு விட வேண்டாம். வாழ்க்கையில் வேதனைப்படும் சம்பவங்கள் எது நிகழ்ந்தாலும், உங்கள் பூர்வ ஜென்மை வினை குறைகிறது என்று மனதைப் பக்குவப்படுத்திக் கொண்டு , இறைவனை இன்னும் தீவிரமாக பற்றிக் கொள்ளுங்கள்.

இடுக்கண் வருங்கால் நகும் அளவுக்கு, நாம் இன்னும் போகவில்லை. வலி , வேதனை இருந்தாலும், தினமும் இறைவனை நினைத்து அவன் பொறுப்பில், விட்டுவிடுங்கள். முடிந்தால் தினமும் அவனைப் பார்த்து வாருங்கள். இல்லையா, வாரம் ஒருமுறையாவது கண்டிப்பாக செல்லுங்கள். அழுகிற  புள்ளைக்கு தான் பால் கிடைக்கும். மனதில் , ஆழத்தில் உங்கள் அழுகை தீராமல் இருக்க வேண்டும். கடவுளை பார்க்கும்போதே , கண்ணிலேயே உங்கள் கோரிக்கையை சொல்லுங்கள்.   உங்களைப் பார்க்கும் ஒவ்வொரு நொடியும்,அந்த இறைவனுக்கே மனது பதற வேண்டும். என்னடா, நாள் தவறாமல் நம்மளை நம்பி , இங்கே வர்றானே , இவனுக்கு என்ன செய்யலாம்னு யோசிக்க வைக்கும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்களை - அவனே சீக்கிரம் அனுப்ப வேண்டும். கண்டிப்பாக அனுப்புவான், நிச்சயமா அது நடக்கும்...

அதல பாதாளத்தில் விழுந்து விட்டோமே என்று கலங்கி நிற்க வேண்டாம். தோல்விகள் மாதிரி ஒரு நல்ல படிப்பினையை உங்களுக்கு யாரும் கற்றுத் தர முடியாது. சிகரம் நீங்கள் தொடுவது உறுதி..!

தோல்விகளில் இருந்து மீண்டு, வாழ்க்கையில் நீங்கள் சீக்கிரம் முன்னுக்கு வர, சில எளிய யோசனைகளை இப்போது கூறுகிறேன்...

மது , மாமிசம் இனிமேல் மறந்தும் தொட வேண்டாம். எல்லா ஜீவ ராசிகளுக்கும் வினைப் பயன் உண்டு. ஆடு, கோழிகளை நாம் உண்ணும்போது, அவற்றின் பாவத்தையும் நாம் சேர்ந்து சுமக்கப் போகிறோம். நம் பாவத்தை கரைக்கவே இன்னும் எவ்வளவு கஷ்டங்களோ..? அக்பர் சொன்னது போல, நம் வயிறு பிணங்களைப் புதைக்கும் சுடுகாடாக இருக்க வேண்டாம்.

வாரம் ஒரு முறையாவது , உங்கள் மனதுக்கு நிம்மதி  அளிக்கும் ஒரு கோவிலுக்கு சென்று, ஒரு மணி நேராமாவது அங்கே, மனமுருக இறைவனை வேண்டுங்கள். ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஒரு ஸ்தல விருட்சம் உள்ளது. அந்த விருட்சம், இறைவன் அமர்ந்து இருக்கும், கர்ப்ப கிருகத்திற்கு சமம்.  உங்கள் தீய வினைகளை ஈர்த்து , உங்கள் வினைச் சுமையை குறைக்கும். எல்லாராலும், கர்ப்ப கிருகத்தினுள்ளே செல்ல முடியாது. ஆனால், ஸ்தல விருட்சத்தின்  அடியில் அமரலாம். அங்கு அமர்ந்து, நீங்கள் ஜெபிக்கும் மந்திர ஜெபம் , அளவில்லாத ஆற்றலுடன், உங்களை கவசம் போல் பாதுகாக்கும். ஆலயங்கள் ஆற்றலுடன் திகழ , கோபுர கலசமும், ஸ்தல விருட்சமும் தான் மிகப் பெரிய காரணிகள்.

ஜாதி மத இன வேறு பாடின்றி , இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவரும் ஜெபிக்க வேண்டிய மந்திரம் . ஓம். பிரணவ மந்திரம். சிவ சிவ என்று ஜெபிக்கும்போது உங்களுக்கு கர்ம வினைகள் அழிய ஆரம்பிக்கும். ஆனால், சிவ சிவ மந்திரம் உங்களுக்கு பற்று, பாசத்தை  அழித்து துறவறத்தை நோக்கி இட்டுச் செல்லும். குடும்பஸ்தர்களுக்காகிய நமக்கு இந்த மந்திரம் சரிப் படாது. மகான் மிஸ்டிக் செல்வம் ஐயா, அவர்கள்  தன ஒட்டுமொத்த வாழ்வையே ஆன்மீக ஆராய்ச்சியில் ஈடுபட்டு , கண்டறிந்த மகத்தான மந்திரம் " ஓம் சிவ சிவ ஓம் " , சிவ சிவ மந்திரத்துக்கு முன்னும் , பின்னும் ஓம் சேரும்போது , அதன் சக்தி அளவிட முடியாத அளவுக்கு பன்மடங்கு ஓங்கி விடுகிறது. பல உயரிய வேத மந்திரங்களுக்கு இணையானது இந்த மந்திரம். வேதங்களை கற்று உணர, நமக்கு பாக்கியம் உண்டோ , இல்லையோ தெரியாது. ஆனால் , உரிய நேரத்தில் இந்த மந்திரம் கிடைத்த வகையில் , நாம் ஒவ்வொருவரும் பாக்கியசாலிகளே.

தினமும் , குறைந்தது பத்து நிமிடம் காலையிலும், இரவிலும் ஜெபிக்க ஆரம்பியுங்கள். அவனுள் தொடங்கி, அவனுள் முடிவதே உலகம். ஒரு நாளை தொடங்கும்போதும், முடிக்கும்போதும் இந்த மந்திரத்தை சொல்ல ஆரம்பியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக, நேரத்தை நீங்கள் பின்னர் அதிகரித்துக் கொள்ளலாம். எந்த மந்திரமும், ஒரு லட்சம் முறை ஜெபித்த பிறகே, தன் சக்தியைக் காட்டத் தொடங்கும்.

அதன் பிறகு பாருங்கள், உங்களுக்கு நடக்கும் அற்புதத்தை..!  உங்கள் வாழ்க்கையே , ஜெபிக்கும் முன், ஜெபித்த பின் என்று பிரித்து உணர முடியும்... வஞ்சனை இல்லாது, நீங்கள் உங்களுக்குத் தெரிந்த அனைவருக்கும் , இந்த மந்திரத்தை கற்றுக் கொடுங்கள். ஜெபம் பண்ணும்போது, மஞ்சள் துண்டு, வேஷ்டி , கையில் ருத்திராட்சம் இருந்தால் மிக நல்லது, ஜெபித்த பிறகு - தண்ணீர் அல்லது இளநீர் , அவசியம் அருந்துங்கள். அது, உங்கள் மந்திர சக்தியை உங்கள் உடம்பிலே தங்க வைக்கும். எது இருந்தாலும், இல்லை என்றாலும், இந்த மந்திர ஜெபத்தை ஜெபிக்கலாம். பயண நேரங்களில் கண்டிப்பாக தவிர்க்கவும். நடந்து செல்லும்போதும் ஜெபிக்க வேண்டாம்..!

அண்ணாமலை , சபரிமலை , மேலும் புனித பாத யாத்திரைகளில் ஜெபிக்கலாம்.

மாதம் ஒரு முறை - சதுரகிரி, அண்ணாமலை , உங்கள் குல தெய்வம், ஸ்ரீவில்லிபுத்தூர் அன்னை பத்திரகாளி, முருகனின் அறுபடை வீடுகள், சமயபுரம், மதுரை, கொல்லிமலை , திருவாற்றியூர் , மயிலாப்பூர் , திருப்பதி, ஸ்ரீரங்கம் , காஞ்சிபுரம் போன்ற மேலும் இறை இன்றும் நடமாடும் பல பிரசித்திப் பெற்ற ஸ்தலங்களில் , ஏதாவது ஒன்றிற்கு , அவசியம் சென்று வாருங்கள். தமிழ் நாட்டில் சக்தி வாய்ந்த ஆலயங்கள் ஏராளமாக உள்ளன.

தவறாமல் , ஆலய தரிசனத்தை பயன் படுத்திக் கொள்ளுங்கள். அந்த கால பழைய ஆலயங்கள் எல்லாம் , இன்றளவும் பல சித்தர்களின் நடமாட்டம் சூட்சுமமாக உள்ள இடங்கள். அவர்களின் ஒரே ஒரு பார்வை கூட, நம் பாவத்தை ஒரு நொடியில் போக்கிவிடும். போலி, பாசாங்கு இல்லாத , பகட்டு இல்லாத - உங்கள் நாம ஜெபம், பல மகா புருஷர்களின் தரிசனத்தை உங்களுக்கு நிகழ்த்தும்.

எந்த ஆலயம் சென்றாலும், அவசியம் இந்த மந்திர ஜெபத்தை செய்து வாருங்கள். ஸ்தல விருட்சத்தின் அடியில் , நீங்கள் ஜெபம் செய்யும்போது , பரவச உணர்வு உங்களுக்கு நிச்சயம் உண்டாகும்.

இரவில் சீக்கிரம் தூங்கி, காலையில் சீக்கிரம் எழுந்து - பிரம்ம முகூர்த்த வேளையில், இறைவனை தொழும் பழக்கத்தை , இயற்கையை ஆராதிக்கும் பழக்கத்தை ஆரம்பியுங்கள். இது, எல்லாவற்றிலும் மிக முக்கியமானது. நீங்கள் உங்களுக்கு கொடுத்துக் கொள்ளும், மிக சிறந்த பரிசு , இதுதான். கொஞ்சம் யோகா, கொஞ்சம் மூச்சுப் பயிற்சி , கொஞ்சம் தியானம், மந்திர ஜெபம். உங்கள் உடலும் , மந்திர உடலாகிவிடும். பஞ்ச பூதங்களையும், நவ கிரகங்களையும் நீங்கள் வசியம் செய்து விடலாம்..!

தினமும் ஒரு கைப்பிடி அரிசி  , இறைவனுக்கு என்று எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட அளவு சேர்ந்தவுடன், அதை சதுரகிரி போன்ற ஸ்தலங்களில் , அல்லது உங்கள் அருகில் இருக்கும் ஆலயங்களில் அன்னதான திட்டத்திற்கு சேர்த்து விடுங்கள்.. தினமும், வேறு ஒரு ஜீவ ராசிக்கு , சிறிதளவாவது உணவு இடுங்கள். ( காகம், நாய், பசு, உடல் ஊனமுற்ற, ஆதரவு இல்லாத ஏழைகளுக்கு ) . இது உங்கள் தலைமுறைக்கே நீங்கள் சேர்த்து வைக்கப் போகும் புண்ணியம்..!

இந்த ஓம் சிவ சிவ ஓம் மந்திரத்தை - நம் வாசகர்கள் அனைவரும் , குறைந்தது பன்னிரண்டு புதியவர்களுக்கு , அறிமுகப் படுத்துங்கள்... இது மகத்தான, புண்ணிய காரியம். ஓம் சிவ சிவ ஓம் மந்திர அறிமுகத்தை , நோட்டீஸ் போல அச்சடித்து , ஆலயங்களில் வரும் பக்தர்களுக்கு, கொடுக்கலாம்.

எந்த ஒரு கலையையும், நீங்கள் கற்றுக் கொண்டு இருந்தால் , அதை தகுதி உள்ள பன்னிரண்டு பேருக்கு , நீங்கள் சொல்லிக் கொடுக்கும்போது , அந்த கலையில் நீங்கள் சகலகலா வல்லவராவது நிச்சயம் , என்பது விதி.....!

எங்கெங்கும் ஓம் சிவ சிவ ஓம் , அருள் அலை பரவட்டும்..! வைணவ சம்பிரதாயம் மேற்கொள்ளும் அன்பர்கள் ஓம் ஹரி ஹரி ஓம் என்றும் ஜெபிக்கலாம்..! பிறவிப் பயனை அடையுங்கள்.. ! நமக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் , கிடைக்கும் நேரத்தில் கிடைத்தால் போதாது... விரைவில் கிடைக்க வேண்டும்..!

இந்த கட்டுரை, இணைய உலகில் - தமிழ் கூறும் ஒவ்வொரு ஆன்மீக அன்பருக்கும் சென்றடைய உதவுங்கள். நீங்கள் வலைப்பூ வைத்து இருந்தால், இந்த கட்டுரையை பதிவிடுங்கள். அல்லது லிங்க் கொடுங்கள். நமது கட்டுரைகளை, தங்கள் வலைப் பூவில் - காப்பி , பேஸ்ட் செய்து கொள்ளலாமா என்று , நிறைய பேர் அனுமதி கேட்கிறார்கள். தயக்கமே வேண்டாம்..! யான் பெற்ற இன்பம் , பெருக இவ்வையகம்..! பூட்டி பூட்டி வைச்சு , நான் போகும்போது  கொண்டு போகப் போறது எதுவுமே இல்லை.   விருப்பம் இருந்தா நன்றி போட்டு  , லிங்க் கொடுங்க.... இல்லையா , நீங்களே போட்டது போல கூட போட்டுக்கோங்க.. நல்ல கருத்துக்கள் , நாலு பேரை சென்றடைந்தால் போதும்..! அதை நீங்கள் செய்தால் என்ன, நான் செய்தால் என்ன?

உலகம் எவ்வளவு சீக்கிரமா , கேவலமா சீரழிஞ்சுக்கிட்டு இருக்குங்கிறது நான் சொல்லி , தெரிஞ்சுக்க வேண்டியது இல்லை. நாம மட்டும் நல்லா இருந்தா போதாது, சுற்றி இருக்கிறவங்களும் நல்லா இருந்தா, நாமும் நல்லா இருப்போம்..!  ஒரு ரவுடி கிட்ட ஒரு வருஷம் இருக்கிறதுக்கும், ஒரு முனிவர் கூட ஒரு வருஷம் இருக்கிறதுக்கும்   - கிடைக்கும் பலன்கள் எப்படி இருக்கும்னு , நமக்குத் தெரியாதா என்ன? இப்ப நாம எப்படிப் பட்ட ஒரு கூட்டத்தில் இருக்கிறோம் என்று ஒரு வினாடி நினைத்துப் பாருங்கள்.

நம்மை சுற்றி இருக்கிறவங்களுக்கும் - இந்த அருள் அலை பரவ , உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் ..!

நாம் இந்த வாழ்வில் ஜெயிக்க வேண்டுமானால், தனி மனித ஒழுக்கம் , முழு நம்பிக்கையுடன் கூடிய இறை அர்ப்பணிப்பு, தெளிவான இலக்கு , அப்பழுக்கில்லாத திட்டமிடல் , சீரிய முயற்சி இருந்தாக வேண்டும். மெல்ல மெல்ல உறுதியான முன்னேற்றம் நிச்சயம் உங்களுக்கு ஏற்படும்..!

நாம் எந்த மதத்தில், எந்த குலத்தில் பிறந்தோம் என்பது முக்கியமில்லை..!

போகிற போக்கில் ஒரே ஒரு விஷயம் மட்டும். ஒவ்வொரு முறையும் அண்ணாமலை சென்று , அருணாச்சலேஸ்வரரை தரிசித்து ராஜ கோபுரம் வழியாக வெளியே வரும்போது, இடப் பக்கத்தில் நம் கண்களில் " இளைய ராஜா , ஜீவா அம்மையாரின்" பெயர்கள் தென்படும்.

ராஜ கோபுரம் - புனருத்தாரணம் செய்ய , நிதி உதவி செய்தவர், இசை ஞானி - நடமாடும் சரஸ்வதி - இளைய ராஜா அவர்கள். மனிதன் பிறந்தது , ஒரு தாழ்த்தப்பட்ட குலத்தில் தான். ஆனால், மனிதனாகப் பிறந்ததற்கு , இதைவிட வேறு என்ன ஒரு சாதனை செய்ய வேண்டும்?

அவரது சோதனைகள் கடந்த , இந்த சாதனைக்கு - மேலே போல்ட் லெட்டரில் கொடுத்து இருக்கிறேனே , அந்த குணங்கள் தான் காரணம்..!

நம் ஒவ்வொருவரும், இப்படிப் பட்ட பெருமைப் படத் தக்க காரியங்கள் செய்யும் அளவுக்கு, நம் மனசாட்சியே நம்மைப் பார்த்து பெருமைப் படும் அளவுக்கு ,  ஒரு நல்ல நிலை அடைய , அந்த இறைவனின் கருணை நிழல்  , நம் மீதும் விழட்டும்..! சத்தியமும், தர்மமும் நிலைக்கட்டும் !

இதற்க்கு நீங்கள் எடுத்து வைக்கும் முதல் படி தான்... ஓம் சிவ சிவ ஓம் ..! அதன் பின், அந்த இறை உங்களை வழி நடத்தும். இந்த மந்திர ஜெபமே, உங்கள் உடம்பில் உள்ள நாடி நரம்புகளில் ஊடுருவி , நவ சக்கரங்களையும் சுழலச் செய்யும். பல புண்ணிய யாத்திரைகள் செய்த பலன்களை , உங்கள் வீட்டில் இருந்தே கிடைக்கச் செய்யும்.

இதை உணர்வுப் பூர்வமாக அனுபவித்து , உணர்ந்து உங்களுக்கு இதை தெரிவிக்கிறேன்..! இந்த அரிய, பொக்கிஷத்தை , நம் உலக நன்மைக்காக அருளிய ஐயா மிஸ்டிக் செல்வம் அவர்களுக்கு, என் சிரம் தாழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..!

எந்த மந்திர ஜெபமும் , அமாவாசை தினத்தில் ஜெபிக்க ஆரம்பிப்பது நல்லது. ஆனால் , நல்ல காரியம் தொடங்க , இன்னும் பதினைந்து நாட்கள் பொறுக்க முடியாது.. இன்றிலிருந்தே ஆரம்பியுங்கள்..! இன்று ஒரு அபூர்வ சக்தி நிறைந்த தினம். புரட்டாசி மாத பௌர்ணமி. தந்தையும் , மகனுமான - மாபெரும் கிரகங்களான சூரியனும் , சனியும் இணைந்து , சந்திரனை பார்வை இட விருக்கிறது.. !

தந்தை , மகன் உறவு சுமூகமாக இல்லாதவர்கள் , குடும்ப ஒற்றுமை மேலோங்க இந்த நாளின் பௌர்ணமி வழிபாட்டை பயன் படுத்திக் கொள்ளவும்.  விதி வசத்தால் தந்தையை இழந்து - தவிப்பவர்கள், புத்திர சோகத்தால் தவிப்பவர்கள், கர்ம வினைகளால் - தந்தையும், பிள்ளையும் இருந்தும் அநாதை போல தவிப்பவர்கள் , குழந்தை பேறுக்காக காத்து இருப்பவர்கள், குழந்தை வரம் வேண்டி நீண்ட நாள் தவித்துக் கொண்டு இருப்பவர்கள் , அரசு வேலைக்காக போராடிக்கொண்டு இருப்பவர்கள்,  ஏழரை , அஷ்டம சனியால் , புதை குழியில் விழுந்து தத்தளிப்பது போல தவிப்பவர்கள், மேலும் வாழ்க்கையில் முன்னேற துடிக்க தவிப்புடன் போராடும் அத்துணை பெரும் - இன்றைய பௌர்ணமி தின வழிபாட்டை , நம்பிக்கையுடன் செய்யுங்கள்..!  மனம் உருக , ஓம் சிவ சிவ ஓம் ஜெபியுங்கள்..!

அந்த சிவம் உங்களை கவனித்துக் கொள்ளும்..! மீண்டும் இப்படிப் பட்ட நாள் வர இன்னும் பதின் மூன்று மாதங்கள் நீங்கள் காத்து இருக்க வேண்டும்..!

நம் முன்னோர்களின் ஆசியை முழுவதும் பெற்று, அவர்களின் மனம் குளிர , அவர்களின் ஆத்மா சாந்தி அடையும் அளவுக்கு, ஒரு நல்ல நிலைமைக்கு நாம் சென்று அடைய , கன்னி ராசியில் சூரியன் நிற்பதால் ஏற்படும் இந்த பௌர்ணமி நன்னாள் , நமக்கு துணை நிற்கட்டும்..!

இனி வர விருக்கும் ஒவ்வொரு நாளும் , புதுப் பொலிவை நமக்கு கொண்டு வர, அந்த இறையருள் என்றும் நம் துணை நிற்கட்டும் ..!

நினைத்தாலே துயர் துடைக்கும், நம் அன்னை பத்திரகாளியின் அருள் நிழல் , நம் ஒவ்வொருவரையும் வழி நடத்தட்டும்!

மகத்தான , ஒரு ஆன்மீக பரவச அனுபவத்துக்கு தயாராகுவோம் !

வாழ்க அறமுடன் ! வளர்க அருளுடன் !

The World





கி.மு 14 பில்லியன்

பெரும் வெடியில் உலகம் தோன்றியது.

கி.மு 6 - 4 பில்லியன்

பூமியின் தோற்றம்.

கி.மு. 2.5 பில்லியன்

நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.

கி.மு. 470000

இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.

கி.மு. 360000

முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கி.மு. 300000

யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.

கி.மு. 100000


நியாண்டெர்தல் மனிதன்
கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர்.

கி.மு. 75000

கடைசி பனிக்காலம். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.

கி.மு. 50000

தமிழ்மொழியின் தோற்றம்.

கி.மு. 50000 - 35000

தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.

கி.மு. 35000 - 20000

ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.

கி-மு. 20000 - 10000

ஒளியர் கிளைமொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகாலம் ( இந்தோ ஐரோப்பிய மொழிகள் )

கி-மு. 10527

முதல் தமிழ்ச்சங்கத்தை பாண்டிய மன்னன் காய்கினவழுதி தோற்றுவித்த காலம். 4449 புலவர்கள் கூடினர். முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன.

கி.மு. 10527 - 6100

பாண்டிய மன்னர்கள் காய்கினவழுதி வடிவம்பலம்ப நின்ற நெடியோன், முந்நீர்ப் விழவின் நெடியோன், நிலந்தரு திருவிற் பாண்டியன் செங்கோன், பாண்டியன் கடுங்கோன்.

கி.மு. 10000

கடைகி பனிக்காலம் முற்றுப்பெற்றது. உலக மக்சுள் தொகை 4 மில்லியன். குமரிக்கணடம் தமிழர் 100000.

கி.மு. 6087

கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டம் மூழ்கியது.

கி.மு 6000 - 3000

கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டவன் பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான். 3700 புலவர்கள் இருந்தனர். அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் எழுந்தன. பாண்டிய மன்னர்கள் செம்பியன் மந்தாதன், மனுச்சோழன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் அதியஞ்சேரல், சோழன் வளிதொழிலாண்ட உரவோன், தென்பாலி நாடன் ராகன், பாண்டியன் வாரணன், ஒடக்கோன், முட்டதுத் திருமாறன் ஆண்டகாலம்.

கி.மு. 5000

உலக மக்கள் தொகை 5 மில்லியன். சிந்து சமவெளி நாகரிகம் தொடக்கம். முகஞ்சதாரோ, ஹரப்பா.

கி.மு. 4000

சிந்து சமவெளி மக்கட் தொகை 1 மில்லியன்.

கி.மு - 4000

கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம். சுமேரியாவில் புதை பொருளாராய்ச்சி சிந்து சமவெளி வணிகப் பொருள் கண்டது.

கி.மு - 3200

சிந்து சமவெளியினர் 27 விண்மீன்கள் இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின் முழு மறை வடிவங்கள் நிலைபபாடு கண்டனர்.

கி.மு - 3113

அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம்.

கி.மு - 3102

சிந்து சமவெளிக் தமிழர்களின் "கலியாண்டு" ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத் தொடங்கியது.


மண்டையோட்டு வடிவங்களின் வகைகள்

இடமிருந்து வலம்: நெடுமண்டை நீள்வட்ட வடிவம்; இரண்டு குட்டைமண்டை வடிவங்கள்- நீளுருண்டை வடிவமும் ஆப்பு வடிவமும்; நடுமண்டை ஐங்கோண வடிவம்.



கி.மு - 3100 - 3000

ஆரியர்கள் சிந்து சமவெளி வழி நுழைந்தனர். துணி நெய்தல் ஐரோப்பா சிந்து சமவெளியில் ஆரம்பித்தது. தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.

கி.மு - 2600

எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம்.

கி.மு - 2387

இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது.

கி.மு - 2000 - 1000

காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம். கங்கைவெளி - சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி - சம்பரன் ஆட்சி.

கி.மு - 1915

திருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.

கி.மு. - 1900

வேத கால முடிவு. சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.

கி.மு. 1500

முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில் மூழ்கியது. இரும்பின் உபயோகம். கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

கி.மு. - 1450

உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன.

கி.மு. - 1316

மகாபாரத கதை வசிஸ்டரால் அமைக்கப் பட்டது.


கி. மு. 1250

மோசஸ் 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார்.

கி. மு . 1200

ஓமரின் இல்லயாய்டு, ஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன் சண்டை.

கி. மு. 1000

உலக மக்கள் தொகை 50 மில்லியன்.

கி. மு. 1000-600

வடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது.

கி. மு. 950

அரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும் இந்தியா வருகை.

கி. மு. 950

வடமொழி முழு வளர்ச்சியடையாது பேச்சு மொழி உருவெடுத்தக் காலம்.

கி. மு. 925

யூதர்களின் அரசன் தாவிது இப்போதைய இசுரேல், லெபனானை பேரரசாகக் கொண்டிருந்தான்.

கி. மு. 900

இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம்.

கி. மு. 850பின்

இபபோதைய இந்தியாவின் பொதுவான மொழி தமிழ், வடமொழி, (வடதமிழ், தென்தமிழ்) என மொழிகள் உருவாயின. வடபுலத்தில் பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி எனவும் பெயர்பெற்றன. பிராமிக்கும், தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டு. வடமொழி பாகதமாகவும், தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன. (சமசுகிருதம் வடமொழி அல்ல. காரணம் அது போதுமான வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.) தொல்காப்பியம்- பிராகிருதப் பிரகாசா இலக்கண நூற்கள் எழுதப்பட்டன, கடைச் சங்க காலத்தில் நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துபாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை, மருதக்காஞ்சி, முல்லைப்பட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை, முதலிய நூல்கள் தோன்றின. திருக்குறள் தலையாய நூல், பின்னர் சங்க கால முடிவுக்குப் பின் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலிய ஐம்பெரும்காப்பியங்களும், முதுமொழிக்காஞ்சி, களவழி நாற்பது, கார்நாற்பது, நாலடியார் திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும் தோன்றின.

கி. மு. 776

கிரேக்கத்தில் (கிரிஸ்) முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி.


குழந்தைகள் குகையில் கண்டு எடுக்கப்பட்ட மண்டையோடு. மென்டோனா, இத்தாலி. பித்திக்காந்திரோப் பஸ் 1 யின் மண்டையோடு. (தூபுவா 1891ல் கண்டு எடுத்தது) சீனாந்திரோப்பஸின் மண்டையோடு (மீட்டமைப்பு: கெராஸிமவ்)


கி. மு. 750

பிராகிருத மொழி மக்கள் மொழியாக ஆரம்பித்தது.

கி. மு. 700

சொரோஸ்டிரேணியிசம் பெர்சியாவில் சொரோஸ்டரால் துவக்கப்பட்டது, இவருடைய மதப்புத்தகம் செண்டு அவெசுடா.

கி. மு. 623- 543

கெளதம புத்தர் காலம், தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார்.

கி. மு. 600

லாவோ - துசு காலம். துவோசிசம் சைனாவில் புழக்கம், எளிமை, தன்னலமின்மை சீனர்கள் வாழ்வானது.

கி. மு. 600

கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று, கி.மு. நான்கு, ஐந்து, ஆறாம், நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க மன்னர்கள் இளைஞன் கரிகாற்சோழன், பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன். பழந்தமிழ் இசைக்கருவிகள் வடநாடு முழுவதும் வழக்கில் இருந்தன. (தோற்கருவிகள்) தமிழிலக்கணத்தைப் பின்பற்றி சமஸ்கிருதத்திலும் எழுத முயற்சி மேற்கொள்ளபட்டது. புணர்ச்சி இலக்கணம் சமஸ்கிருதத்தில் திணிக்கப்பட்டுள்ளது.

கி. மு. 599 - 527

மகாவீரர் காலம். ஜெயின மதம் தோற்றம் உயிர்த்துண்பம் தவிர்த்தல் இவரின் பெருங்கருத்து.

கி. மு. 560

பித்தகோரசு கிரேகத்தில் (கீரிஸ்) கணிதம், இசைக் கற்றுக் கொடுத்தக் காலம். மரக்கறி உண்ணல், யோகாசனம், ஓவியம் தமிழ் நாட்டில் கற்பிக்கப்பட்டன.

கி. மு. 551-478

கன்பூசியஸ் காலம். சீனர்களின் கல்விக்கு அடிப்படையே இவருடைய சமுதாய கல்வி, மக்களின் வாழ்முறை, மதம் யாவும்.

கி. மு. 500

கரிகாற் சோழன் காலம். உலக மக்கள் தொகை 100 மில்லியன். இப்போதைய இந்திய மக்கள் தொகை 25 மில்லியன்.

கி. மு. 478

இளவரசன் விசயா 700 துணையாளர்களுடன் இலங்கையில் சிங்கள அரசு ஏற்படுத்தல்.

கி. மு. 450

ஏதேன்சில் சாக்கரடீஸ் புகழோடு இருந்த காலம்.

கி. மு. 428 - 348

சாக்கரடீஸ் மாணவர் புளுட்டோவின் காலம்.

கி. மு. 400

கிரேக்கத்தில் மருத்துவமேதை இப்போகிரட்டீசின் காலம். பனினி வடமொழி இலக்கணம் அமைத்தார்.

கி. மு. 350 - 328

உதயஞ் சேரலாதன் காலம் (செங்குட்டுவன் நெடுஞ்சேரலாதன்)

கி. மு. 328 - 270

மகன் இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன் ( ஆரியரை வென்றவன் - கிரேக்க யவனரை அடக்கியவன்)

கி. மு. 326

அலெக்சாண்டர் சிந்துப் பிரதேசத்தின் மீது படையெடுப்பு. வெற்றி அமையவில்லை.

கி. மு. 305

சந்திரகுப்த மெளரியரின் அட்சிக்காலம். கிரேக்க பேரரசு அமைத்த செலுக்கசை தோற்க்கடித்தவர்.

கி. மு. 302

சந்திரகுப்தரின் அமைச்சர் கெளடில்யர் அர்த்தசாத்திரம் எழுதல்.

கி. மு. 300

சீனர்கள் வார்த்த இரும்பு கண்டுபிடித்தல்.

கி. மு. 300

கல்வெட்டுகளில் சோழ, பான்டிய, சத்தியபுத்திர, சேர அரசுகள் இருந்தன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ், பிராகிருதம் இரண்டும் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாகவும் விளங்கின. பிராகிருதம் - மக்களின் மொழி. நாணயங்களின் ஒரு பக்கம் தமிழ், மறுபக்கம் பிராகிருதம் என அமைந்திருந்தன.

கி.மு. 273-232

மெளரிய பேரரசர் அசோகர் காலம். தமிழ்நாடு தவிர மற்றவை இவர் வசம் இருந்தது. கலிங்க போர் இவரை புத்த மதத்திற்கு மாற வைத்தது. இவரது அசோக சக்கரம் இன்று இந்தியக் கொடியில் உள்ளது.

கி.மு. 270-245

சேரன் பல்யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும்பூண் சென்னி, பாண்டியன் ஒல்லையூர் பூதப் பாண்டியன், ஆகியோரின் காலம்.

கி.மு. 251

புத்த மதம் பரப்ப அசோகர் தன் மகனை இலங்கைக்கு அனுப்பினார்

கி.மு. 245-220

சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலம்.

கி.மு. 221

புகழ் வாய்ந்த சைனாவில் 2600 கல் நீளமுள்ள பெரும் சுவர் கட்டப்பட்டது.

கி.மு. 220 - 200

கரிகாற்சோழனுக்கும் பெருஞ் சேரலாதனுக்கும் போர்.

கி.மு. 220-180

குடக்கோ நெடுஞ்சேரலாதன் ஆட்சி. உறையூர்ச் சோழன் தித்தன், ஆட்டணத்தி, ஆதிமந்தி, ஆகியோர் வாழ்ந்த காலம்.

கி.மு. 200

முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம் எழுதினார்.

கி.மு. 200

தமிழ்நாட்டில் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் எழுதினார். 18 சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் பழனி முருகன் கோவிலை ஏற்படுத்தினார்.

கி.மு. 125-87

ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் காலம்.

கி.மு. 87-62

செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆட்சி. பாரி, ஒரி, காரி, கிள்ளி, நள்ளி முதலிய குறுநில மன்னர்கள் ஆட்சி

கி.மு. 62-42

யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆட்சி, சேரமான் மாரி வெண்கோ தொண்டியில் ஆட்சி. இக்காலத்தில் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் கல்லாடனார்.(கல்லாடம்)

கி.மு. 42-25

பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சி, சேரமான் மாரிவென்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கானபெரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய் இருந்தார்கள். இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என அவ்வை பாராட்டினார், மோசிக்கீரனார், பொன்முடியார் கொண்கானங்கிழான் நன்னன், கரும்பனூர்கிழன், நாஞ்சில் வள்ளுவன் குறிப்பிடத்தக்கவர்கள்.

கி.மு. 31

உலகப் பொது மறையாம் தமிழனின் நன்கொடையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.

கி.மு. 25-9

இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி. பாண்டியன் பழையன் மாறன். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார், புல்வற்றூர் ஏயிற்றியனார் ஆகியோரின் காலம்.

கி.மு. 9-1

கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, பாண்டியன் கீரன் சாத்தன் வாழ்ந்த காலம்.

கி.மு. 4

ஏசுநாதர் - கிருத்துவர் மதம் கண்டவர் பெத்தலயேமில் பிறந்தார். —



Saturday, October 08, 2011

வாழைத்தண்டின் மருத்துவ குணங்கள்

வாழைத்தண்டின் மருத்துவ குணங்கள்

சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது.
சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால் அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.

சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.

சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்.

வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.

உடலைக் குளிர்ச்சியடையவைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது.

உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

யார் இந்த சோழர்கள்?


யார் இந்த சோழர்கள்?

சோழர் காலம்

தென் இந்திய வரலாற்றின் உயர்விற்கு சோழ அரசர்கள் பெரும் பங்களிப்பு செய்துள்ளனர். முற்கால சோழர்கள் சங்ககாலத்தில் ஆட்சிபுரிந்தனர். சங்க கால சோழ அரசர்களில் தலைச்சிறந்த அரசர் கரிகாலன் ஆவார். வெகு காலத்திற்குப் பிறகு பல்லவர்கள் ஆட்சி வீழ்ச்சியுற்ற போது சோழ அரசு மறுபடியும் தலைதூக்க ஆரம்பித்தது. விஜயாலயன் எனும் சோழ மன்னரால் மீண்டும் புதுப்பொலிவுடன் சோழர் ஆட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டடது. பிற்கால சோழமன்னர்கள் கி.பி. 850 முதல் கி.பி.1279 வரை சுமார் 430 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர்.


சான்றுகள்

கிடைக்கக் கூடிய பொருத்தமான சான்றுகளின் அடிப்படையில்தான் எந்தவொரு சமூகம் அல்லது அரசாட்சியின் வரலாற்றையும் எழுத முடியும். சோழர்களைப் பற்றி அறிய ஏராளமான கல்வெட்டு, தொல்பொருள், மற்றும் இலக்கியச் சான்றுகள் கிடைக்கின்றன. மகாவம்சம் போன்ற இலக்கியச் சான்றுகளும், மெகஸ்தனிஸ் போன்ற வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகளும் முற்கால சோழர்கள் பற்றி சிறந்த சான்றுகளாக உள்ளன.


கல்வெட்டுகள்

சோழர் கால வரலாற்றைப் பற்றிய தகவல்களை அறிய உதவும் சான்றுகளில் முதன்மையானவை கல்வெட்டுகள் ஆகும். சோழ அரசர்களின் வாழ்க்கை, ஆட்சிமுறை மற்றும் சோழர்கால அரசியல், பொருளாதார, சமய, சமூக பண்பாட்டு நிலைகளைப் பற்றி கல்வெட்டுகள் கூறுகின்றன. கோவில்களில் உள்ள தூண்களிலும் சுவர்களிலும் கல்வெட்டுகள் பதிக்ககப்பட்டுள்ளன. தஞ்சை பெதிய கோவில் என்றழைக்கப்படும் பிரகதீஜ்வரர் ஆலயத்தில் கல் வெட்டுகள் ஏராளமாக காணப்படுகின்றன. கடலூர், விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், கும்பகோணம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பல முக்கிய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சோழ அரசர்களின் ஆட்சிமுறைகளைப் பற்றி தகவல்களை கல்வெட்டுகள் வழங்குகின்றன.

மூன்றாம் இராஜேந்திரனின் ஆட்சி முறையைப் பற்றி திருவந்திபுரம் கல்வெட்டுகள் கூறுகின்றன. குடவோலை முறை, கிராம நிர்வாகம், வரி வசூல் முறை, நில வருவாய் முறை ஆகியவை குறித்து உத்திரமேரூர் கல்வெட்டுகள் கூறுகின்றன. சில கல்வெட்டுகளில் மெய்கீர்த்திகள் எனப்படும் மன்னர்களின் வெற்றி வரலாறுகளும் காணப்படுகின்றன.

அன்பில் செப்பேடுகள், கன்னியாகுமரி கல்வெட்டுகள், கரந்தை செப்பேடுகள் மற்றும் திருவாலங்காடு செப்பேடுகள் ஆகியன சோழர்களைப் பற்றிய பயனுள்ள பல தகவல்களை அளிக்கின்றன. சைவ மதம் அங்கு சிறப்புடன் இருந்தது குறித்து தஞ்சையில் உள்ள பெருவுடையார் கோவில் கல்வெட்டுகள் கூறுகின்றன. சோழர்களின் சமகால அரசர்களான சேரர், பாண்டியன், இராஷ்டிர கூடர், கங்கா ஆகியோர் வெளியிட்ட கல்வெட்டுகளும் சோழர்களின் சிறப்புகள் பற்றிக் கூறுகின்றன.


நினைவுச் சின்னங்கள்:

சோழர்கால வரலாற்றை அறிந்துகொள்ள நினைவுச் சின்னங்கள் மிக முக்கிய சான்றுகளாய் பயன்படுகின்றன. நினைவுச் சின்னங்கள் ஆலயங்களின் பகுதிகளாக உள்ளன. தஞ்சையில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம், கங்கை கொண்ட சோழபுரம் கோவில், தாராபுரத்திலுள்ள ஐராவதீஸ்வரர் ஆலயம், திருபுனவத்திலுள்ள கம்பகரேஸ்வரர் ஆலயம் சோழர்காலத்தின் முக்கிய நினைவுச் சின்னங்கள் ஆகும்.


நாணயங்கள்:

சோழ அரசர்கள் பொன், வெள்ளி, செப்பு நாணயங்களை வெளியிட்டனர். அவற்றில் பொற்காசுகள் மிக்க குறைவாகவும், வெள்ளி செப்புக்காசுகள் அதிகமாகவும் கிடைக்கின்றன. சோழர் காலத்தில் வெளியிடப்பட்ட சோழ நாணயங்களில் சோழர்களின் சின்னமாகிய புலி சினனமும், சோழ அரசர்களின் பெயர்களும் காணப்பபடுகின்றன. இராஜராஜ சோழன் இலங்கையின் நாணயத்தைப் போன்ற நாணயங்களை நமது ராஜ்ஜியத்தில் வெளியிட்டார். சோழ அரசர்களின் காலங்களை வரிசைப்படுத்தவும், சோழர்கால சமுதாய பொருளாதார நிலைமைகளை அறிந்துகொள்ளவும் இந்நாணயங்கள் பெரிதும் பயன்படுகின்றன.


இலக்கியம்:

சங்கால சோழர்கள் மற்றும் பிற்கால சோழர்கள் பற்றி, அறிந்துகொள்ள இலக்கியங்கள் சிறந்த சான்றுகளாக உள்ளன. சேக்கிழாரின் பெரிய புராணம் சைவ பக்தர்களைப் பற்றிக் கூறுகிறது. இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் சேக்கிழார் வாழ்ந்தார். ஜெயம் கொண்டாரின் கலிங்கத்துப்பரணி ஒட்டக்சுத்தரின் மூன்று உலாக்கள், குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் ஆகிய நூல்கள் சோழர்கள் பற்றி பயனுள்ள பல தகவல்களைத் தருகின்றன. வீர சோழியம், வநசோழ சரிதம், ஸதல புராணம், சோழ வம்ச சரிதம் ஆகிய இலக்கியங்கள் முற்கால சோழ அரசர்கள் பற்றி அறிய உதவும் சறந்த இலக்கியச் சான்றுகளாக உள்ளன.


அயல்நாட்டு சான்றுகள்:

சோழ அரசிற்கும் இலங்கை அரசிற்கும் இடையயே இருந்த உறவுகள் பற்றி இலங்கை இலக்கியமான மகாவம்சம் கூறுகின்றது. மேலும் இந்நூல் இலங்கையில் சோழர் ஆட்சி குறித்தும் கூறுகின்றது. ஐரோப்பிய பயணி மார்க்கோ போலோ, அயல்நாட்டு எழுத்தாளர் மெகஸ்தனிஸ் ஆகியோர் சோழர்களைப் பற்றி பல சுவையான தகவல்களைக் கூறுகின்றனர். அல்பெரூணி எனும் முகமதிய வரலாற்றாசிரியரும் சோழர்கள் பற்றி எழுதியுள்ளார்.


பிற்கால சோழ அரச குலம்:

பிற்கால சோழ அரச மரபை உருவாக்கியவர் விஜயாலயன் என்ற அரசர் ஆவார். இவர் முத்தரையர்களிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றி கி.மு. 850 ல் அதை சோழ நாட்டின் தலைநகராக்கினார். பல்வல மன்னர் அபராஜிதனை தோற்கடித்து அவரது இராஜ்ஜியத்துடன் இணைத்துக்கொண்டார். சிவ பக்தரான இவர் பல இடங்களில் சிவன் கோவில்களைக் கட்டினார்.


முதலாம் பராந்தகன் கி.பி. 907 – கி.பி. 953:

உத்திரமேரூர் கல்வெட்டுகள் முதலாம் பராந்தக சோழன் பற்றி நிறைய தகவல்களைத் தருகின்றன. இவர் ஆதித்யனின் மகனாவார். இவர் டிதன் இந்தியாவின் பல பகுதிகளை வென்று தனது நாட்டுடன் இணைந்து தமது பேரரசின் எல்லையை வடக்கே நெல்லூர் வரை விரிவுபடுத்தினார். பாண்டிய மன்னரைத் தோற்கடித்து வெற்றிகரமாக மதுரையைக் கைப்பற்றினார். இந்த வெற்றியை போற்றும் விதமாக இவருக்கு ‘மதுரை கொண்டான்’ என்ற பட்டடம் வழங்கப்ப்டடது. அத்துடன் மேலும் இலங்கை மற்றும் பாண்டிய அரசர்களின் கூட்டு ராணுவத்தைத் தோற்கடித்ததால் இவர் ‘மதுரையும் ஈழமும் கொண்டான்’ என்ற பட்டம் பெற்றார்.


இவர் ஒரு சிவபக்தர். இவர் சிதம்பத்தில் உள்ள நடராஜர் ஆலயத்திற்கு பொன்னால் கூரை வேய்ந்தார். எனவே இவர் ‘பொன்வேய்ந்தசோழன்” என்று அழைக்கப்பட்டார். இவரது ஆட்சி காலத்தில் கிராம நிர்வாகம் சிறப்புற்று காணப்பட்டது. பராந்தகனுக்குப் பிறகு கண்டராதித்தியன். அரிஞ்சயன், இரண்டாம் பராந்தகன் என அழைக்கப்பட்ட சுந்தரசோழன் மற்றும் உத்தமசோழன் ஆகியோர் அரசாண்டனர்.


முதலாம் இராஜராஜ சோழன் கி.பி. 985 – கி.பி 1014

இரண்டாம் பராந்தனுக்கும் வானவன் மகா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர் முதலாம் இராஜராஜ சோழன் ஆவார். திருவலாங்காடு செப்பேடுகள் இராஜராஜன் பற்றி கூறுகின்றன. இவர் சோழர் குலத்தின் மிக வலிமை மிக்க மன்னராவார். முதலாம் இராஸராஸ சோழனின் சிறப்புகள் சோழ நாட்டிற்கு மட்டுமல்லாது தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்க்கின்றன. இவர் காலத்தில் பல கல்வெட்டுகள் வெளியிடப்பட்டன. இராஜராஜனிடம் வலிமை மிக்க ராணுவம் இருந்தது. இவர் சேரரின் ராணுவத்தை திருவனந்தபுரத்தில் தோற்கடித்தார். இவர் கொல்லத்தை சார்ந்த பாஸ்கர ரவி எ்னற மன்னனையும் தோற்கடித்து, ‘காந்தளூர் சாலை கலமருதளிய’ என்ற பட்டம் பெற்றார். இவர் அமரபுஜங்கன என்ற பாண்டிய மன்னனை வென்றார். இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தாவை வென்று அனு ராதபுரத்தையும் இலங்கையின் வட பகுதியையும் இவர் கைப்பற்றினார். இவர் புலனருவா நகரத்தைப் புதிய தலைநகராக்கி அங்கு பல கோவில்களைக் கட்டினார். இவர் சேர, பாண்டிய, இலங்கை ஆகிய மூன்று மன்னர்களை வென்று

மும்முடி சோழன்” என்ற பட்டம் பெற்றார். இவர் மைசூர் பகுதியில் உள்ள கங்கபடி, தடிகை பாடி, நொளம்ப்பாடி ஆகியவற்றை வென்றார். இவர் விளிங்ஞம் என்ற பகுதியை வென்று ‘திக் விஜயம்’ நடத்தினார். மாலத் தீவுகள், கலிங்கம் ஆகியவற்றையும் வென்றார். இவருக்கு ‘அருண்மொழி’, ‘இராஜகேசரி’ போன்ற பட்டங்கள் உண்டு. இராஜராஜ சோழனுக்கு அவரது மகன் பட்டத்து இளவரசான ராஜேந்திரன் ஆட்சி மற்றும் போர்ப்பணிகளில் மிகவும் உறுதுணையாக இருந்தார்.

இராஜராஜ சோழன் ஒரு சிறந்த நிர்வாகி, தமது ஆட்சி காலத்தில் இவர் நில அளவை முறையை அறிமுகப்படுத்தினார். இவரது ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் அனைத்திலும் உள்ளாட்சி நிர்வாக முறையை சிறப்பாக நடைமுறைப்படுத்தினார். இவர் தஞ்சையில் உள்ள பெரிய கோவில் என்றழைக்கப்படும் பிரகதீஸ்வரர் ஆலயத்தைக் கட்டினார். இவர் புத்த மதத்தையும் சைவ சமயத்தையும் ஆதரித்தார். நாகப்பட்டினத்தில் புத்தஆலயம் கட்டட அனுமதி அளித்ததோடு ஆனைமங்கலம் எனும் கிராமத்தையும் புத்த மடாலயத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.















முதலாம் இராஜேந்திரன் கி.பி. 1002 – கி.பி.1044:

முதலாம் இராஜராஜ சோழனுக்குப் பிறகு அவரது மகன் முதலாம் இராஜேந்திரன் அரியணை ஏறினார். முதலாம் இராஜேந்திரனைப் பற்றி திருவாலங்காடு செப்பேடுகள், கரந்தை செப்பேடுகள் ஆகியன பல தகவல்களைக் கூறுகின்றன. இவர் ஒரு சிறந்த நிர்வாகியும், போர் வீரரும் ஆவார். இவரின் தந்தையாருடைய இராணுவ தீரச்செயல்களிலும் சிறந்த நிர்வாகத்திலும் இவருக்கு முக்கியப் பங்குண்டு. இவர் பதிவ ஏற்றவுடன் இலங்கை முழுவதையும் கைப்பற்றி இலங்கையில் சோழர் ஆட்சியை நிலை நிறுத்தினார். இவர் தனக்கு உதவ தன் மகன் இராஜாதி ராஜனை பட்டத்து இளவரசர் ஆக்கினார்.

தனது ஆட்சியின் போது இவர் பல சிவ ஆலயங்களையும் விஷ்ணு ஆலயங்களையும் கட்டினார். இவர் வங்காள அரசன் முதலாம் மகிபாலனைத் தோற்கடித்து கங்கையில் இருந்து தஞ்சைக்குத் தண்ணீர் கொண்டு வந்தார். இந்நீர், கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அருகே உள்ள சோழ கங்கம் என்ற நீர்பாசன ஏரியில் சேர்க்கப்பட்டடது. இந்த வெற்றியைப் போற்றும் விதமான இராஜேந்திர சோழனுக்கு ‘கங்கை கொண்டான்” என்ற சிறப்புப்பட்டம் சூட்டப்பட்டது.


இவர் தன் தலைநகரை தஞ்சையில் இருந்து கங்கைகொண்ட சோழப்புரத்திற்கு மாற்றினார். இவர் இலங்கையை கைப்பற்றினார். பின்னர் சேர பாண்டிய அரசர்களை வெற்றிக்கொண்டார். சாளுக்கிய குல அரசன் இரண்டாம் ஜெயசிம்மனோடு இவர் போரி்ட்டார். கலிங்கத்து அரசனையும் இவர் வெற்றிகொண்டார். இவர் ஒரு வேதக்கல்லூரியை நிறுவினார். முதலாம் இராஜேந்திரன், வீரராஜேந்திரன், அதிராஜேந்திரன் ஆகிய அரசர்கள் சில வருடங்கள் சோழ நாட்டை ஆட்சி செய்தனர்.



முதலாம் குலோத்துங்கன் கி.பி. 1120 – கி.பி. 1170:

சோழர் வரலாற்றில் குலோத்துங்கசோழன் மிகப்பெரிய திருப்புனையை ஏற்படுத்தினார். குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ், விக்கிரம சோழன் உலா ஆகிய நூல்கள் குலோத்துங்கனின் நிர்வாகம், இராணுவ வெற்றிகள் பற்றி விளக்குகின்றன. இவர் சேர பாண்டிய மன்னர்களைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தார். மேற்கு சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தியனுடன் இவர் போரிட்டார். குலோத்துங்கன் காலத்தில் சோழப்பேரரசு மிகவும் பரந்து காணப்பட்டது. வினயாதித்யாவிடம் இருந்து வெங்கியின் ஆட்சியைக் கைப்பற்றினார். முதலாம் குலோத்துங்க சோழனை சீனா போன்ற தூர கிழக்கு நாடுகள் நன்கு அறிந்திருந்தன. இவர் சீன அரசவைக்கு தூதுவரை அனுப்பினார். இவர் இலங்கையின் வட பகுதியில் தன் ஆதிக்கத்தை இழந்தார். ஆனால் தென் பகுதியில் தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்தினார். இவர் கலிங்கத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். சோழப்பேரரசின் பொருளாதார நிலையை முன்னேற்றமடைய செய்தார். பல புதிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி முறையான நில அளவை முறையினை இவர் தொடர்ந்து நடைமுறைப்படுத்தினார்.

மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சுங்க வரி உட்பட பல விதமான வரிகளை நீக்கி, வரி சுமையில் இருந்து மக்களை மீட்டடதால் இவருக்கு ‘சுங்கம் தவிர்த்த சோழன்’ என்ற சிறப்புப்பட்டம் வழங்கப்பட்டது. இவர் பல நிர்வாக சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். சோழப் பேரரசு இவர் காலத்தில் புத்துயிர் பெற்றது. இவரது ஆட்சியில் உள்நாட்டு அமைதியும் சிறந்த நிர்வாகமும் சோழமக்களுக்கு கிடைத்தன.



சோழ அரசர்களில் மிகவும் சிறந்த அரசராக முதலாம் குலோத்துங்கன் கருதப்படுகிறார். அவருக்கு பின் வந்த அரசர்கள் திறமையற்றவர்களாக இருந்ததால் சோழர் ஆட்சி வீழ்ச்சியுற்றது. —

இந்தி எதிர்ப்பு போராட்டம்

இந்தியா என்பது ஒரு துணைக்கண்டம். பல இன மக்கள் வாழும், பல்வேறு தேசங்கள் இருந்த ஒரு நிலப்பரப்பு. 1700 நூற்றாண்டுகளில் வந்த ஐரோப்பியர்களில் ஆங்கிலேயர்கள் பெரும்பாலான அரசுகளை கைப்பற்றியதால், தங்களது ஆளுமை வசதிக்காக பல தேசங்களை ஒன்றிணைத்து உருவாக்கியதே இந்தியா என்னும் நாடு.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ஆங்கிலேயர்கள் இந்திய துணைக்கண்டத்தில் இருந்த அனைத்து அரசர்களிடமும் அனுமதி பெற்றே ஐக்கிய இந்தியாவை உருவாக்கினர் அதற்கு விடுதலையும் வழங்கினர் ...

1947 ஆம் ஆண்டு விடுதலை பெற்று 1952 ஆம் ஆண்டிற்குள் இந்தியா குடியரசு நாடாக மாற்றம் பெற தேவையான அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்க்கார், இந்தியாவின் அரசுகள் அதன் அனைத்து தேசிய இனத்தையும், சிறுபான்மையினரையும் காக்க வேண்டும் அவர்கள் நலனில் அக்கறை கொள்ளவேண்டும் என்றே வகுத்தார் ....

இந்திய துணைக்கண்டத்தின் இனங்களை எல்லாம் ஒன்று சேர்த்து 'இந்தியன்' என்ற புதிய ஒரு இனத்தை உருவாக்க நினைத்தது இந்திய அரசு ... இந்திய அரசின் அத்தகைய சூழ்ச்சியின் ஒரு வடிவம்தான் இந்தியை தேசிய மொழியாக்க முயன்றது ... அது மனித மாண்பிற்கு பொருந்தாத ஒன்று ... ஆதலால் தான் மொழி போராட்டம் வலுப்பெற்று தேசிய மொழிச் சட்டம் தோல்வியில் முடிந்தது.

இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பின்னரே 1963 யில் ஆட்சி மொழி சட்டம் (இந்தி மற்றும் ஆங்கிலம்) நிறைவேற்றப்பட்டது, இல்லையேல் 1965 குடியரசு தினம் முதல் இந்தி மட்டுமே ஆட்சி அதிகார மொழியாக வளர இந்திய துணைக்கண்டத்தின் மற்ற மொழிகளும் இனங்களும் அழிந்திருக்கும்

Sneha Ullal