Tuesday, May 08, 2012

அவிழ்த்திட வா





அங்கு  காலியாக இருந்தது
உன் இருக்கை மட்டுமல்ல
என் வாழ்க்கையும் தான்…
.
என்னைக் காயப்படுத்த நீ
அந்த இடத்தில் இருக்கவேண்டிய அவசியமில்லை
உன் இன்மை தான் என்னை அதிகம் காயப்படுத்தும்
.
நரகம் எது என்று என்றாவது
உன்னிடம் கேட்டேனா நான்…
பின் எதற்கு நீ இல்லாத இடம் அது என்று
எடுத்துக்காட்டோடு விளக்கம்?
.
உனதை சேர்த்து இரு உயிர் நான் சுமந்தும்
நீ இல்லாத இடத்தில் பிணம் தான் நான்…
.
என் இசைப் பட்டியலை காதலால் நிரப்பியவள்
இன்று என் சோகத்தால் நிரப்புகிறாய்…
.
உன்னால் என் வாழ்கை பலருக்கு
ஆச்சரிய குறியாயிற்று…
இன்று எனக்கே கேள்விக்  குறியாயிற்று
.
விடை நீ என்று தெரிந்த பிறகு
குழப்பும் புதிரானேன் நான்…
அவிழ்த்திட  வா…

No comments:

Post a Comment