Monday, December 31, 2012

ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

புது வருடம் பிறக்க போகிறது

பிடிக்காத ஒன்றை எந்நாளும்
நம்மால் நினைக்க இயலாது
அதுபோல
பிடித்த எவற்றையும் நம்மால்
எளிதில் மறக்க இயலாது
பிடிக்காத கடந்த நாட்களை
நாம் மறப்போம்
பிடித்த எண்ணங்களுடன்
நாளைய உலகை வரவேற்போம்
காயம் பட்ட இடத்தில்
மருந்து போடுவது தான்
நட்பு
இது விட்டுக்கொடுப்பதும்,
ஆறுதல் சொல்வதும்,
மகிழ்ச்சியை பரிமாறுவதும்,
ஆபத்தில் கை கொடுப்பதும்,
துக்கத்தில் தோல் கொடுப்பதும்,
ஆபத்தில் இருக்கும் தனது
நட்பை காப்பதுமே...
ஆகவே உண்மை
நண்பர்களாய் நாம் வாழ்வோம்...

ஒரு ஆண் தன்னுடைய
இரண்டாவது தாயையும்,
ஒரு பெண் தன்னுடைய
முதல் குழந்தையையும்
தேடுகின்ற இந்த உலகில்
ஆணின் முட்டாள் தனத்தை
புரிந்து கொள்ளும் பெண்ணும்
பெண்களின் குழந்தை தனத்தை
ரசிக்கின்ற ஆணும் தான்
உலகின் மிகச் சிறந்த
காதலர்களாக வாழ்கிறார்கள்

மேலும் சொல்லபோனால்

நமது உடலில்
இரண்டு கண், இரண்டு காது,
இரண்டு கை, இரண்டு கால்
என்று இரண்டு இரண்டாக
படைத்த இறைவன் -

நமது உயிரை இயக்கும்
இதயத்தை மட்டும்
ஒன்றாக படைத்துவிட்டான்....?
ஏனெனில்
தனக்கு பொருத்தமான
இன்னொரு இதயத்தை தேர்ந்தெடுத்து
இணைத்துக் கொள்ள
ஆதலால்
காதலையும், காதலர்களையும்
வாழ்த்துவோம் , வாழவைப்போம்

ஒரு மனிதன்
தன்னுடைய நம்பிக்கையை
ஆதாரமாக கொண்டுதான் வாழ்கிறான்.
வாழ்க்கையின் ஆணிவேர்
நம்பிக்கையில்தான் பொதிந்துள்ளது!
எந்த செயலையுமே
ஆணவத்தால் சாதிப்பது கடினம்...
ஆனால் அதேசெயலை
அன்பால் சாதிப்பது சுலபம்....

துன்பத்தினை அனுபவிக்காமல்
நம்மால்
இன்பத்தின் இனிமையை
உணர முடியாது
மர்மங்கள் நிறைந்த
நாளைய உலகில்
எதையும் எதிர் கொள்ள
தைரியமும், தன்னம்பிக்கையுடனும்
அடியெடுத்து வைப்போம்
வாழ்க்கையென்ற நந்தவனத்தில்
வாசமிகு மலர்கள்
அன்பாலும் காதலாலும்
இனிதே மலரட்டும்!
வாழ்க்கையென்ற வானவில்லின்
வண்ணங்கள் முத்து
முத்தாய்ப் பதியட்டும்!!
வாழ்க்கை முழுதும்
நல்ல சிந்தனைகளும், மனிதமும்
நல்லெண்ணங்களும், அன்பும்
வான்மழையாய் பொழியட்டும்!!

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment